அகரம்: March 2012

Home \\ Archive: March 2012

வரைவிலக்கணம் : ஒரு கருதுகோளிலிருந்து உட்கிடையாக எதிர்வுகூறல் பெறப்பட்டு அனுபவச்சோதனை மூலம் பெறப்பட்ட தரவுகளுடன் எதிர்வுகூறல் பொருந்தாவிட்டால் கருதுகோள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே பொய்ப்பித்தல் கோட்பாடு ஆகும்
வடிவம் : (H→ I )
                      ~I
                     ஃ ~H
அவதானம் பரிசோதனை போன்ற அனுபவ சோதனை மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எண்ணக்கருக்களை உள்ளடக்கிய துறைகள் விஞ்ஞானங்கள் ஆகும்

கருதுகோள் / கொள்கை ஒன்றினை பொய்ப்பித்தல் கோட்பாட்டிற்கு உட்படுத்த வேண்டுமாயின் கருதுகோள் / கொள்கை கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள்
1. தெளிவான மொழிநடையிலும் கவர்பாடற்ற பதங்களாலும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2. ஆனுபவச்சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எதிர்வு கூறலை பெறுதல் வேண்டும்
3. திட்டமானதும் புலக்காட்சிக்கு உட்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விமர்சனம் :
1. அனுபவம் சாரா விஞ்ஞானங்களுக்கு பொருந்தாமை
2. சில அனுபவ விஞ்ஞானங்களுக்கும் பொருந்தாமை
3. எல்லா விஞ்ஞானங்களும் நிபந்தனை வடிவத்தில் அமையாமை
4. பல விஞ்ஞானிகள் விஞ்ஞானம் என்ற துறைகளை நிராகரித்தமை
5. எதிர்கூறல் பொய்யான போதும் கருதுகோள் பொய்ப்பிக்கப்படாமை
6. பொய்ப்பித்தல் கோட்பாட்டின்படி நிராகரிக்கப்பட்ட கருதுகோள் ஏற்கப்பட்டமை
7. விஞ்ஞான முறைமை பெறும் வடிவத்தை இலகுபடுத்தியமை
8. விஞ்ஞானிகள் தமது கோட்பாடு பொய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்வைப்பதில்லை

விஞ்ஞான ரீதியற்ற வசனங்களின் பண்புகள்
1. கவர்பாடான வாக்கியங்கள்
2. அனுபவத்திற்கு அப்பாற்பட்ட வாக்கியங்கள்
3. அளவையியல் கணித உண்மைகள்
4. எதிர்வுகூற முடியாத வாக்கியங்கள்
5. உறுதியற்ற வாக்கியங்கள்
6. பெறுமான வாக்கியங்கள்

பொய்ப்பித்தல் கோட்பாட்டில் அடங்கியுள்ள தொகுத்தறி பண்புகள்
1. முதன்மைக்காரணி, துணைக்கருதுகோள் என்பனவற்றின் துணையுடன் ஒரு கருதுகோளிலிருந்து எதிர்வுகூறலை பெறுதல் - தொகுத்தறி
2. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு கருதுகோளை உருவாக்குதல் - தொகுத்தறி
3. கருதுகோளிலிருந்து பெற்ற எதிர்வு கூறலை அனுபவச்சோதனைக்கு உட்படுத்துதல் - அனுபவ முறையை பயன்படுத்துவது தொகுத்தறி
4. நிராகரிக்கப்பட்ட பல கருதுகோள் ஒரு சரியான கருதுகோளின் தோற்றத்திற்கு வழியமைத்தல் - தொகுத்தறி

உளவியல் ஒரு விஞ்ஞானம்
(உளவியல் ஓர் ஈரடி இயல்பான விஞ்ஞானம்)
ஒரு விஞ்ஞானமாக உளவியலுக்கு அளிக்கப்படும் இடத்தை ஆராய்க ?


உளவியலானது மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனித மனம் பற்றியும் ஆய்வு செய்கின்ற துறையாகும். இங்கு ஆய்வு விடையமான மனித நடத்தை அனுபவச் சோதனை களுக்கு உட்படுத்தக்கூடியதாக அமைவதனால் உளவியல் விஞ்ஞானத் தன்மையைப் பெறுகின்றது. தர்க்கப் புலனறி வாதிகள் உளவியலை விஞ்ஞானம் என ஏற்றுக் கொண்டுள்ளனர்.
நுஒ: நடத்தை உளவியல்

உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் இயற்கை விஞ்ஞானப் பண்புகள்)


1. உளவியலில் பயம் கோபம் போன்ற உள நடத்தைக்கும் - மூளை நரம்புத் தொகுதி உடல் உறுப்புக்கள் என்பன வற்றிற்கும் இடையிலான தூண்டல் துலங்கல் தொடர்பு பற்றி ஆய்வு செய்யப்படுவதனால் உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானம் ஆகும்.
    Eg:  பவ்லோவின் தூண்டல் துலங்கல் பரிசோதனை
2. உளவியலில் இயற்கை விஞ்ஞானங்கள் பயன்படுத்தும் அனுபவ முறைகளான அவதானம், ஆய்வுகூடப் பரிசோதனை, கட்டுப்பாட்டுக் குளுச் சோதனை முறை, கருவிகளின் பயன்பாடு என்பன பண்படுத்தப் படுவதனாலும் உளவியல் ஒரு இயற்கை விஞ்ஞானமாகக் கருதப்படுகின்றது.
    Eg: 1879 இல் வில்லியம் வூண்ட் இனால் அமைக்கப்பட்ட உளவியல் ஆய்வு கூடம்


உளவியல் ஒரு சமூக விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் சமூக விஞ்ஞானப் பண்புகள்)

1. உளவியலில் என்பது மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனம் பற்றியதுமான ஆய்வு ஆகும் சமூக விஞ்ஞான ஆய்வு விடையமும் மனித நடத்தையாதலால் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.

2. சமூக விஞ்ஞானத்திலும், உளவியலிலும் ஆய்வாளன், ஆய்வு விடையம் என்ற இரண்டுமே மனிதனாகக் காணப்படுவதனால் இங்கு அகவயத் தாக்கங்களின் செல்வாக்கான ஒருபக்கச் சார்பு, விருப்பு வெறுப்பு, சுயநல மனப்பாங்கு என்பன ஏற்பட்டு இவை இரண்டும் அகவயத்தன்மை உடையதாக காணப்படுவதனால் உளவியலை சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.
3. உளவியயலில் ஆய்வு முறைகளாக பேட்டிமுறை, வினாக் கொத்து முறை, தனியாள் வரலாற்றாய்வு முறை, அகநோக்கல் முறை போன்ற சமூக விஞ்ஞான ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுவதனால் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானத் துறையாகக் கருதலாம்.

4. உளவியலிலும், சமூக விஞ்ஞானத்திலும் மனிதன் சுயசித்தத்துடன் செயற்படுவதனால் இவை பன்மைக் காரணத்தை உடையது, எதிர்வுகூறலை மேற் கொள்வது கடினம், முடிவுகள் உறுதியற்றுக் காணப்படும் என்பதனாலும் உளவியலை ஒரு சமூக விஞ்ஞானம் எனக் கருதலாம்.

5. உளவியலானது மனித நடத்தைகள் பற்றி ஆராயும் சமூகவியல், மானிடவியல், பொhருளியல், அரசியல் போன்ற சமூக விஞ்ஞானத் துறைகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையது.


உளவியல் ஒரு பிரயோக விஞ்ஞானம்
(உளவியலில் காணப்படும் பிரயோக விஞ்ஞானப் பண்புகள்)

உளவியலில் மனித நடத்தை பற்றியும் நடத்தைக்கு காரணமான மனம் பற்றியும் ஆய்வு செய்து கண்டறிந்த விதி கொள்கைகளை பயன் படுத்தி மக்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகள் என்பன உருவாக்கப் படுகின்றன.

1. உளநோயாய் பாதிக்கப் பட்டவர்களின் நோயைக் குணப்படுத்துவதற்காக மருத்துவ விஞ்ஞானத்தில் 'உளச்சிகிட்சை முறை' பயன்படுத்தப் படுவதால் உளவியலை ஒரு பிரயோக விஞ்ஞானம் எனலாம்.

2. கல்வி உளவியலில் மாணவர்களின் உள வளர்ச்சிக்கு ஏற்றவாறு எவ்வாறு கல்வி புகட்டலாம் என்பது பற்றியும், கற்றல், ஞாபகம், மறதி என்பன பற்றியும், அறிவு திறமை ஆளுமை என்பனவற்றை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இவை தவிர குழந்தை உளவியல், தொழில் உளவியல் என்பனவும் உளவியலை ஒரு பிரயோக விஞ்ஞானமாகக் காட்டுகின்றது.


உளவியல் ஒரு விஞ்ஞானம் அல்ல

உளவியலானது மனித நடத்தை பற்றியும் நடத்தையை வெளிப்படுத்தும் மனம் பற்றியதுமான ஆய்வு ஆகும். பொதுவாக விஞ்ஞானமானது அனுபவச் சோதனைகள் மூலம் சோதிக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும் ஆனால் மனிதனது மனதை அனுபவச் சோதனைக்கு உட்படுத்த முடியாதுள்ளது. உளவியலில் கவர்பாடான எண்;ணக்கருக்கள் உள்ளடங்கியிருப்பதும். எதிர்வு கூறல் சிரமமாக அமைவதும் உளவியலை ஒரு விஞ்ஞானமல்லாத துறையாகக் காட்டுகின்றது.
   உதாரணம்: சிக்மன் புரொட்டின் கொள்கையில் பயன் படுத்தப்பட்ட எண்ணக்கருக்கள்- Id, Ego, Super Ego





மருத்துவத்தில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்

மருத்துவம் என்பது நோய்க்கான காரணிகளைக் கண்டறிந்து அவற்றிற்கான சிகிட்சைகளை வழங்கி நோய்த் தடுப்பு பற்றி ஆராய்கின்ற ஒரு துறையாகும்.
மருத்துவத்தில்; - அவதானம், பரிசோதனை போன்ற அனுபவச் சோதனைகள் மூலம் வாய்ப்பு பார்க்கக் கூடியதாக அமைவதனாலும், எதிர்வுகூறல், காரண காரிய விளக்கம் என்பன சிறப்பாக அமைவதாலும் மருத்துவத்தினை ஒரு விஞ்ஞானத் துறையாகக் கருதலாம்.
மருத்துவ விஞ்ஞானத்தில் தூய விஞ்ஞான இயல்புகளும் பிரயோக விஞ்ஞான இயல்புகளும் ஒருங்கே காணப்படுகின்றன.

மருத்துவத்தில் காணப்படும் துய விஞ்ஞான பண்புகள் : -

1. நோய் பற்றி கண்டறிந்து அதற்கான காரணங்களையும் கண்டறிகிள்றது.
2. பல்வேறு நோய்க்கு காரணமாகும் நோய்க் கிருமிகள் பற்றியும் ஆய்வு செய்கின்றது.
3. நோய் நிவாரணியான மருந்துகள் பற்றி ஆய்வு செய்து அவற்றை கண்டு பிடிக்கின்றது.
4. உடல் உள ரீதியான பிரச்சினைகள் எவ்வாறு மனிதனை சுகதேகியாக்கின்றது என்பது பற்றி ஆய்வு செய்கின்றது.

மருத்துவத்தில் காணப்படும் பிரயோக விஞ்ஞான பண்புகள் : -

1. நோய்களை கண்டறிந்து அவற்றிற்கு சிகிட்சைகள் (சத்திரசிகிட்சை, உளச்சிகிட்சை) வழங்கி மக்களுக்கு தேவையான பொருட்கள் சேவைகள் என்பனவற்றை உருவாக்குகின்றது.
2. மருந்துகளை பயன்படுத்துவதனாலும் அவற்றை சோதிப்பதனாலும் மருத்துவத்தினை ஒரு பிரயோக விஞ்ஞானத் துறையாகக் கூறலாம்


ஆயுர் வேதம் ஒரு விஞ்ஞானம்
(ஆயுர்வேதத்தை விஞ்ஞானம் எனக் கருதுகின்றீறா)

ஆயுர்வேத வைத்திய முறை ஒரு பாரம்பரிய மருத்துவ முறையாகும். இது மாந்திரீகத் தன்மை வாய்ந்தது என மக்களால் நம்பப்பட்டு வந்தது. ஆனால் இன்று ஆயுர்வேதம் நவீன மருத்துவத் துறையுடன் இணைந்து விஞ்ஞான இயல்புகளைப் பெற்றுள்ளது.


ஆயுர்வேதத்தில் காணப்படும் விஞ்ஞான பண்புகள் : -
1. ஆயுர்வேத ஒளடதங்களின் உற்பத்தியின்போது மேலைத்தேய ஒளடதங்களின் உற்பத்தி முறையும், நுணுக்கங்களும் பயன்படுத்தப்படுகின்றது.      Eg: குளிகைகள், தூள் மருந்து வகைகள்
2. நோயாளிகளை சோதிக்கும் போது அனுபவ முறைகளும், மருத்துவ உபகரணங்களும்  பயன்படுத்தப் படுகின்றன
Eg: நாடித்துடிப்பறியும் கருவி, உடல் வெப்பமானி
3. மேலைத்தேய மருத்துவ முறைகளில் பின்பற்றப்படும் சத்திரசிகிட்சை முறைகளையும் ஆயுர்வேதம் பயன்படுத்திக் கொள்கிறது.


வரலாறு ஒரு விஞ்ஞானம்
(வரலாறு எந்தளவிற்கு விஞ்ஞானம் ஆகும் )

'மனிதனின் கடந்தகாலம் பற்றிய ஒரு பதிவே வரலாறு எனப்படுகின்றது' வரலாறு மனித நடத்தை பற்றி ஆய்வு செய்கின்றது. இதில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.

1. வரலாற்று எண்ணங்களும் கோட்பாடுகளும் அனுபவச் சோதனை மூலம் பொய்ப்பிக்கக் கூடியதாக அமைவதால் வரலாறு விஞ்ஞானம் ஆகும்.
2. வாலாற்றில் தரவுகளை பெறுவதற்கு அனுபவ முறைகளைப் பயன்படுத்துகின்றது
நுஒ: ஆவணங்கள், சுவடிகள், அகழ்வாராட்சி, தனியாள் வரலாற்று ஆய்வு.
3. வரலாற்றாய்வாளர்கள் அவதானிக்கப்பட்ட தரவு களிலிருந்து தொகுத்தறி முறையினை பயன்படுத்தி பொதுமுடிவுகளைப் பெறுகின்றனர்.
4. வரலாற்றுத் தரவுகளை ஆய்வு செய்யப்பட்டு அவை காரணகாரிய அடிப்படையில் விளக்கப்படுவதனால் வரலாறு விஞ்ஞானத்தன்மை உடையதாகக் கருதப்படுகின்றது.

வரலாற்றில் கூறப்படும் கர்ணபரம்பரைக் கரைகள் என்பனவற்றில் கற்பனைகள், அதீத வர்ணனைகள் என்பன காணப்படுகின்றன. இவற்றை அனுபவச் சோதனைகளின் மூலம் பொய்ப்பிக்க முடியாமல் இருப்பதும் வரலாறு எந்தளவிற்கு ஒரு விஞ்ஞானம் எனக் கூறுவதில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.


தொல்பொருளியல் ஒரு விஞ்ஞானம்
(தொல்பொருளியலில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்)

மிகப் பழங்கால மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்களை (எச்சங்கள்) ஆராய்வதன் மூலம் அக் கால வரலாறு, மக்களின் கலை, கலாசார, பண்பாட்டு பிண்ணணிகளை கண்டறிகின்ற முறையே                                                                                                                     தொல்பொருளியல் ஆகும். இதில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.

1. தொல்பொருளியலில், அகழ்வாராட்சி முறை, கால நிர்ணய முறை என்பன அனுபவ ஆய்வு முறைகளாக பயன்படுத்தப்படுகின்றன.
2. தொல்பொருளியலில் அகழ்வாராட்சி மூலம் கண்டுபிடிக்கப்படும் எச்சங்கள் எக்காலத்திற்கு உரியது என்பதை கண்டறிவதற்காக காபன் 16 (ஊ16) என்ற காலநிர்ணய முறை பயன் படுத்தப்படுகின்றது. இதில் காபன் படிமங்கள் மூலம் இரசாயணப் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றது.
3. தொல்பொருளியல் பூகற்பவியல் அறிவைப் பயன்படுத்துகின்றது.
Eg: மண்ணியல் விஞ்ஞான தொழில் நுட்பங்கள்
4. தொல்பொருளியல் பண்டைக்கால மக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றையும், விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றங்களையும் அறிய முயற்சிக்கின்றது.

ஆயினும் தொல்பொருளியலில் சமூக அமைப்புப் பற்றி ஆய்வு செய்யப்படுவதனால் மனிதனின் அகவயத் தாக்கங்களுக்கு உட்பட்டு தொல்பொருளியலானது ஒரு பலவீனமான சமூக விஞ்ஞானத் துறையாக விளங்குகின்றது.


பொருளியல் ஒரு விஞ்ஞானம்
(பொருளியலில் காணப்படும் விஞ்ஞானப் பண்புகள்)

இயற்கையில் காணப்படுகின்ற பற்றாக்குறையான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு மனித தேவைகளை பூர்த்தி செய்யலாம் என்பதை ஆய்வு செய்கின்ற துறையே பொருளியல் ஆகும். இதன்படி மனித நடத்தைக்கான காரணங்கள் விளக்கப்படுகின்றன. பொருளியலில் பின்வரும் விஞ்ஞானப் பண்புகள் காணப்படுகின்றன.

1. பொருளியலில் அவதானங்களின் மூலம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பொது விதி ழச கோட்பாடுகள் உருவாக்கப்படுகின்றது.
Eg: கேள்வி நிரம்பல் விதி.
2. பொருளியலில் கணித, புள்ளிவிபர முறைகள் பெருமளவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
Eg: அட்டவணைகள், வரைபுகள், நிகழ்தகவு கோட்பாடு
3. பொருளியல் வெற்றிகரமான எதிர்வு கூறலுக்கு இடமளிக்கின்றது.

இயற்கை விஞ்ஞானத் துறைகளான பௌதீகவியல், இரசாயணவியல் போன்ற துறைகள் பிரச்சினைகளை ஆதாரத்துடன் உடனுக்குடன் நிரூபிக்கின்றது. ஆனால் பொருளியலில் தோற்றப்பாட்டிற்கான காரணங்களை உடனடியாக கண்டுகொள்ள முடியாதுள்ளது.



அரசியயல் விஞ்ஞானம் ஒரு விஞ்ஞானம்


அரசியல் விஞ்ஞானம் சமூக நடத்தை பற்றி ஆய்வு செய்வதனால் இது ஒரு சமூக விஞ்ஞானம் ஆகும். இதில் பின்வரும் விஞ்ஞான அம்சங்கள் காணப்படுகின்றன.
1. அனுபவ அடிப்படையில் நேர்வுகள், சமூகத் தோற்றப்பாடுகளை பகுப்பாய்வு செய்து விளக்குகிறது.
2. புள்ளிவிபர, கணித முறைகள் பயன் படுத்தப்பட்டு அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வு கூறல்கள் இடம் பெறுகின்றது.


மொழியியல் ஒரு விஞ்ஞானம்


மொழியியல் பின்வரும் விஞ்ஞான அம்சங்களைக் கொண்டுள்ளது.
1. மொழியியலின் ஒலியமைப்பு பற்றிய ஆய்வுகளும் சோதனைகளும் இடம் பெறுகின்றன.
2. மொழியின் உச்சரிப்பின் வரலாறு ஆய்வு செய்யப்படுகின்றது.
3. மொழி உச்சரிப்பின் போது ஏற்படும் உடல் மாற்றங்கள் பற்றி ஆய்வு செய்கின்றது.
4. மொழியின் வரலாறு சமூகத்தினதும், நாகரிகத்தினதும் வரலாறாக அமைகின்றது.


அழகியல் ஒரு விஞ்ஞானம்


அழகியல் ஒரு பெறுமான விஞ்ஞானமாயினும் விஞ்ஞானம் பற்றிய பொதுவான கருத்தில் அது ஒரு விஞ்ஞானம் அல்ல. விளக்குக  - 2002

அழகியல் ஒரு நியமம் கூறும் விஞ்ஞானம் ஆகும். இது சரி, பிழை நன்மை, தீமை போன்ற பெறுமானங்களை மதிப்பீடு செய்கின்றது. ஆயினும் அழகு என்பது ஆய்வாளன் சார்ந்த விடயமா ஆய்வு விடையம் சார்ந்த விடையமா என்பது பிரச்சினையை ஏற்படுத்துவதால் அழகியலின் விஞ்ஞானத் தன்மை பிரசை;சினையை ஏற்படுத்துகின்றது.
1. அனுபவச் சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் முடியாத தன்மை இருத்தல்.
2. பண்புத் தன்மையை கொண்டிருத்தல்.
3. அகவயத் தi;மையை கொண்டிருத்தல்.


தூய கணிதம் ஒரு விஞ்ஞானம்
தூய கணிதம் ஒரு விஞ்ஞானம் என்பதை நீர் எவ்வாறு நியாயப்படுத்துவீர் ?

ஆனுபவச்சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய அறிவுத் துறைகளே விஞ்ஞானம் ஆகும். தூய கணிதம் நிர்ணயிக்கப்பட்ட விதிகளுக்கமைய முடிவைப் பெறுவதால் இது அனுபவத்தன்மையானது அல்ல.
1. அனுபவச் சோதனைக்கு உட்படுத்த முடியாமை
2. அறிவை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டமை.


மானிடவியல் ஒரு விஞ்ஞானம்
மானிடவியலின் விஞ்ஞான ரீதியான அம்சங்களை தெளிவுபடுத்துக ?

மனித இனம் பற்றிய ஆய்வு மானிடவியலாகும். இது சமூக விஞ்ஞானம் ஆகும். மானிடவியல் இரு பிரிவுகளை உள்ளடக்கியது.
1. பொளதீக மானிடவியல்
2. பண்பாட்டு(சமூகஃகலாசார) மானிடவியல்

பொளதீக மானிடவியலின் விஞ்ஞான அம்சங்கள் :

1. இங்கு மனிதனின் எழும்புகள், பற்கள், மூளை என்பனவற்றில் ஏற்படும் விருத்தி, மாற்றங்கள் என்பனவற்றை பரிணாம அடிப்படையில் ஆய்வு செய்வதால் விஞ்ஞான அம்சத்தைப் பெறுகிறது.
2. மனித எச்சங்கள் எக்காலத்திற்கு உரியது என்பதை கண்டறிவதற்காக காபன் 16 (C16) என்ற காலநிர்ணய முறை பயன் படுத்தப்படுகின்றது.
3. அவதானம், பரிசோதனை போன்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பண்பாட்டு மானிடவியலின் விஞ்ஞான அம்சங்கள் :

1. பண்பாட்டு மானிடவியலில் உலகிலுள்ள பல்வேறு சமூக மக்களின் கலை, கலாச்சாரம், பழக்கவழக்கம், நடத்தைகள்  என்பன பற்றி ஆய்வு செய்யப்படுகின்றது.


சமூகவியல் ஒரு விஞ்ஞானம்


மனித நடத்தை பற்றி ஆராயும் சமூகவியலானது ஒரு சமூக விஞ்ஞானத் துறையாகும். இது பின்வரும் விஞ்ஞான அம்சங்களை கொண்டுள்ளது.
1. சமூகவியலின் தந்தையான மாக்ஸ் வெபரினால் சமூகவியலில் சமூகவிஞ்ஞான ஆய்வுமுறைகள் முறைப்படி பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூகவிஞ்ஞான ஆய்வுமுறைகள் பயன்படுத்தப்படுவதனால் இது சமூகவிஞ்ஞான அம்சத்தைக் கொண்டுள்ளது.
2. குடிசனம் பற்றிய ஆய்வு, சமூக நடத்தை, சமூக மாற்றம்  என்பன பற்றிய சமூகவியல் ஆய்வுகள் சமூக விஞ்ஞான அம்சங்களைக் காட்டுகின்றன.
3. சமூகவியலில் அளவீடு பயன்படுத்தப்படுகின்றது.
நுஒ: கல்வி, வயது, பால் தொடர்பான அளவீடுகள்
4. இங்கு கட்டுப்பாட்டுக் குளு ஆய்வு முறை பயன்படுத்தப்பகின்றது.
5. சமூகவியலில் நேரடி அவதானம், கலந்துரையாடல், போன்ற கள அவதான முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.





கிரேக்க நாட்டு விஞ்ஞானிகள்
1. பைதகரஸ்
கி.மு 580
மெய்யியல், கணிதம், வானியல்
  • கேத்திர கணிதத்தில் உள்ள பைதகரசின் தேற்றம் இவரால் முன்வைக்கப்பட்டது.
  • எண்களின் முக்கியத்துவம், குணாதிசயம் பற்றி கூறியுள்ளார்
  • சங்கீதத்திற்கும் கணிதத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டியுள்ளார்
  • இரவு பகல் ஏற்படுவதற்குக் காரணம் தீக்கோளம் ஒன்றை பூமி சுற்றி வருவதாகும் எனக்கருதினார்
 

    2. ஹிப்போகிரட்டிஸ்
    கி.மு 460 - 377
    மருத்துவம்
    • மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை 
    • மருத்துவர்கள் எடுக்கவேண்டிய ஒழுக்க சத்தியப்பிரமானத்தை அமைத்தார். இது ஹிப்போகிரட்டிஸ் சத்தியப்பிரமானம் எனப்படுகிறது  
    • மருத்துவ நூல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்
     

      3. பிளேட்டோ
      கி.மு 427 - 347
      தத்துவம்
      • சோக்கிரட்டீஸின் முதல் மாணவன் 
      • அரிஸ்டோட்டிலின் குரு 
      • நீதி, சட்டம், கல்வி முறைகள், அரசியல் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார் 
      • தத்துவம், கணிதம் என்பனவற்றை கற்பித்தார்.

      4. அரிஸ்டோட்டில்
      கி.மு 384 - 322
      மெய்யியல்
      • அளவையியலின் தந்தை 
      • உய்த்தறி அளவையியல் முறையை முன்வைத்தார், தொகுத்தறி முறையை ஏற்றார் 
      • உளவியல், ஒழுக்கவியல், அரசியல், பௌதீகம், பௌதீகவதீதம் போன்ற துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டார் 
      • விஞ்ஞானமனிதன்'
      • உயிரியல் விஞ்ஞானத்தின் தோற்றத்திற்கும் வழிவகுத்தார் 
      • இவரது 'தர்க்க நூல்' பிரபலமானது 

      5. இயூக்கிளிட்
      கி.மு 330 - 226
      கணிதம்
      • கேத்திர கணிதத்தின் தந்தை 
      • இந்த கேத்திர கணிதம் உய்த்தறி தர்க்கமுறையை அடிப்படையாகக் கொண்டது.  
      • பகுபடா என்களை முடிவிலி என்றார் நிறுவியவர்
      • The element என்ற கேத்திர கணித நூலை எழுதினார்  

      6. ஆக்கிமிடிஸ்
      கி.மு 287 - 212
      பௌதீகம், கணிதம்
      • விஞ்ஞான பரிசோதனை முறையின் தந்தை 
      • ஆக்கிமிடிசின் மிதப்பு விதி 
      • கப்பித் தொகுதி, நெம்புகோல் தொகுதிகளை கண்டுபிடித்தார் 
      • பை (π) யின் பெறுமானத்தை (π=22/7) நிர்ணயித்தார் 
      • இவை வட்டம், நீள்வட்டம் என்பனவற்றின் பரப்பளவை அறியஉதவின
      • (நீர்இறைக்கும் இயந்திரத்தின்) நீர்த்திருகை கண்டுபிடித்தார்

      7. தொலமி
      கி.பி 100 - 170
      வானியல், புவியியல்
      • புவிமையக் கொள்கையை முன்வைத்தார் 
      • முதன் முதல் தேசப் படத்தை வரைந்தார்


                
      ஆங்கிலேய நாட்டு விஞ்ஞானிகள்

      8. கலென்
      கி.பி 130 - 200
      உடலியல், மருத்துவம்
       உடலியல் பரிசோதனையின் தந்தை
       மிருகங்களை வெட்டி ஆய்வு செய்தார்
       நாடியில் இரத்தம் உண்டு என்பதையும்,
       இதயத்தில் குருதி அசைந்தோடிக் கொண்டிருப்பதையும் கண்டுபிடித்தார்


      9. பிரான்சிஸ் பேக்கன்
      கி.பி
      1561 - 1626 மெய்யியல்
      விஞ்ஞானமுறை தொகுத்தறி முறையியலின் தந்தை   'புதிய முறைகள்' என்ற நூலில் தொகுத்தறிமுறைஅறிமுகம்
      இயற்கை பற்றிய உண்மைகளை அறிய அனுபவ ஆய்வு முறைகளே உகந்தவை என்றார்
      புலமை வாதிகளின் மரபையும், கைவினையாளர் மரபையும் ஒன்றிணைக்கும் கருத்தை முன்வைத்தார்
      அரிஸ்டோட்டிலின் நியாயத்தொடையில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்காட்டினார்.


      10. வில்லியம் ஹாவே
      (றுடைடயைஅ ர்யசஎநல) கி.பி
      1578 - 1657 மருத்துவம் குருதிச் சுற்றோட்டத் தொகுதியை கண்டுபிடித்தார்.  இரத்தம் ஈரலில் இருந்து உற்பத்தியாகிறது, இதயம் 2அவுன்ஸ் இரத்தத்தை கொள்ளக்கூடியது, நிமிடமொன்றிற்கு 72 தடவைகள் துடிக்கின்றது, இதயம் சுருங்கி விரிதலே குருதிச் சுற்றோட்டத்திற்கு காரணம் என்ற உண்மைகளை கண்டறிந்தார்.


      11. தோமஸ் ஹொப்ஸ்
      (வுhழஅயள ர்ழடிடிநள) கி.பி
      1588 - 1691 அரசியல்
      மெய்யியல் இவர் சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (வரம்பற்ற முடியாட்சி)
      இவரது 'லெவியதன்' அரசியல் நூல் பிரபலமானது
      சமூகவியல், ஒழுக்கவியல் போன்ற துறைகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றார்.


      12. ஜோன் லொக்
      ( துழாn டுழஉமந ) கி.பி
      1632 - 1704 அரசியல்
      மெய்யியல் சிவில் அரசாங்கத்தின் இரண்டு உடன்படிக்கைகள் என்ற நூலில் சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (வரம்புடைய முடியாட்சி)   அரசியல் சமத்துவம் (Pழடவைiஉயட நுஙரயடவைல) பற்றி வலியுத்தினார்.  அனுபவ வாதத்தின் தந்தை (அனுபவத்தின் வாயிலாகவே அறிவு பெறப்படுதல்)


      13. ஐசக் நியூட்டன்
      ( ஐளயயஉ நேறவழn ) கி.பி
      1642 - 1727 பௌதீகம்
      கணிதம்
      விஞ்ஞானமுறை
      அரியத்தைப் பயன்படுத்தி சூரிய ஒளியில் 7 நிறங்கள் உண்டு எனக்காட்டினார்.  ஒளியின் நுண்துகள் கொள்கை, புவியீர்ப்பு விதி, இயக்க விதிகள், தொகையீட்டு நுண்கணிதம், வகையீட்டு நுண்கணிதம், ஈருறுப்புத் தேற்றம் என்பன வற்றை கண்டுபிடித்தார்   நேர்வுகளை விளக்கும் முறை, விஞ்ஞானத்தில் கணித விளக்கமுறை, விஞ்ஞான கருது கோள்களையும் விஞ்ஞான கொள்கைகளையும் அமைப்பதற்குரிய வழிமுறை, நுண்கணிதமுறைகளை விருத்திசெய்தார்


      14. எட்மண்ட் ஹெலி
      (நுனஅரனெ ர்யடடநல) கி.பி
      1656 - 1742 வானியல் வால்வெள்ளிகளின் இருப்பிடங்களை பதிவுசெய்து பாதைகளை கணக்கிட்டார்.   76 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியில் உள்ளோருக்கு தென்படும் வால்வெள்ளி பற்றி கணித்தார் இது ஹெலியின் வால் வெள்ளி எனப்படுகிறது


      15. ஜோசப் பிறீஸ்ற்லி
      (துழளநிh Pசநைளவடநல) கி.பி
      1733 - 1804 இரசாயணம் ஒட்சிசன் உட்பட பல வாயுக்களைக் கண்டுபிடித்தார்
      இரச ஒட்சைட்டை வெப்பமேற்றி ஒட்சிசனை பெற்றார்.
      பாபோனிக் அமில வாயுவை நீரில் கரைத்து பருகக்கூடிய சோடா நீரைக் கண்டுபிடித்தார்


      16. மைக்கல் பரடே
      (ஆiஉhயநட குயசயனயல) கி.பி
      1761 - 1867 பௌதீகம்
      இரசாயணம் மின்காந்தக் கோட்பாட்டிற்கு மூலகர்த்தா.  ஒளி,காந்தவிசைக்கிடையிலான தொடர்புகளைக்கூறினார்.
      மின் பகுப்பு விதி , தங்கமுலாம், வெள்ளிமுலாம் பூசும் முறைகளையும் கண்டுபிடித்தார்.


      17. ஜோன் டோல்டன்
      (துழாn னுழடவழn) கி.பி
      1766 - 1844 பௌதீகம்
      இரசாயணம் முதன் முதல் அணுக் கொள்கையைக் கணித்தார்
      அணுவின் அணுத்திணிவை சரியாகக் கணித்தார்


      18. மல்தூஸ்
      ( ஆயடவாரள ) கி.பி
      1766 - 1834 பொருளியல் சனத்தொகை பற்றிய தத்துவம் என்ற புகழ் பெற்ற கட்டுரையை எழுதினார். இதில் சனத்தொகை அதிகரிப்பானது பெருக்கல் தொடரிலும், உணவு உற்பத்தியானது கூட்டல் தொடரிலும் அதிகரிக்கின்றது என்றார்.


      19. ஹம்பிறி டேவி
      (ர்ரஅphசநல னுயஎல) கி.பி
      1778 - 1829 இரசாயணம்
      பௌதீகம் பொட்டாசியம், சோடியம், கல்சியம், பேரியம், மக்னீசியம், போரான், ஸ்ரோன்டியம் எனும் மூலகங்களைக் கண்டுபிடித்தார்    சுரங்கத் தொழிலாளர்களுக்கான காவல் விளக்கு,
         நைதரசன் ஒட்சைட் ( சிரிப்பூட்டும் வாயு ) கண்டுபிடித்தார்.    மின்னோட்டத்தை நீரினுள் செலுத்தி    
        கூட்டுப் பொருட்களை தனிப்பொருட்களாக பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்


      20. ஜே.எஸ்.மில்
      (து.ளு.ஆடைட) கி.பி
      1806 - 1873 மெய்யியல்
      விஞ்ஞானமுறை காரண காரிய தொடர்புகளை கண்டறிய உதவும் முறைகளை (மில்லின் பரி) கண்டுபிடித்தார். இது விலக்கல் முறையை அடிப்படையாகக் கொண்டது. மில்லின் முறைகளில் அவதானம், பரி என்பனவும் உள்ளன.


      21. சாள்ஸ் டார்வின்
      (ஊhயசடநள னுயசறin) கி.பி
      1809 - 1882 உயிரியல் கூர்ப்புக் கொள்கையை முன்வைத்தார்  இங்கு கூர்ப்பைத் தீர்மானிக்கும் காரணி சூழல் ஆகும்
      இதில் தாழ்மட்ட அங்கிகளில் இருந்து உயர்மட்ட அங்கிகள் தோற்றம் பெறுகிறது எனக்கூறினார்.
      இதை மாறல், மிகை உற்பத்தி, வாழ்க்கைப் போராட்டம், தக்கணப் பிழைத்தல், இயற்கைத்தேர்வு மூலம் விளக்கினார்


      22. அல்பிரட் வொலஸ்
      (யுடகசநன றுயடடயஉந) கி.பி
      1823 - 1913 உயிரியல் தன் தனித்துவமான ஆய்வின்படி கூர்ப்புக்கொள்கை உண்மைகளைப் பெற்றார்.
      வொலசும் டார்வினும் 1858 ல் கூட்;டாக கூர்ப்புக் கொள்கை கட்டுரை ஒன்றை வெளியிட்டனர்.
      விலங்குப் புவியியலுக்கு அடிகோலியவர்.


      23. கெல்வின் பிரபு
      ( டுழசன முநடஎin ) கி.பி
      1824 - 1907 மருத்துவம்
      உடலியல் வெப்பவியலில் தனிவெப்பநிலை என்ற கருத்தை வெளியிட்டார்.
      செம்மையான வெப்ப அளவீடுகளை மேற்கொள்ள வாயுவெப்பமானி உதவும் என்றார்.
      கடலுக்கூடாக கடற்தந்தி அமைத்தார்.     கடல்மட்டத்தை அறியும் கருவியைக் கண்டுபிடித்தார்.
      மாலுமிகளுக்கு உதவும் திசைகாட்டியை திருத்தியமைத்தார்


      24. ஜோசப் லிஸ்டர்பிரபு (துழளநிh டநளைவநச) கி.பி
      1827 - 1912 மருத்துவம்
      சத்திர சிகிட்சை வெட்டுக்காயங்கள் உயிராபத்துக்களை ஏற்படுத்துவதற்குக் காரணம் கிருமிகள், காபோலிக் அமிலம் இக் கிருமிகளை அழிக்கவல்லது எனவும், தசையோடு தசையாக சேர்ந்து மறையக்கூடிய நூல் என்பனவற்றை கண்டுபிடித்தார்.;


      25. ஜே.சி.மெக்ஸ்வெல்
      ( து.ஊ.ஆயஒறநடட ) கி.பி
      1831 - 1879 கணிதம்
      பௌதீகம் மின்காந்த கதிர்ப்புக் கோட்பாடு, மின்காந்தவியல் சமன்பாடு என்பனவற்றை அறிமுகப்படுத்தியிருந்தார்.
      மின்சாரத்தின் இயக்கம், வாயுக்களின் இயக்கப்பண்புக் கொள்கை என்பன தொபர்பாக ஆய்வு மேற்கொண்டார்.


      26. றொனால்ட் றொஸ்
      ( சுழயெடன சுழளள ) கி.பி
      1857 - 1932 மருத்துவம் நுளம்பு பற்றியுனம், மலேரியா நோய் பற்றியும் ஆய்வு செய்தார்
      மலேரியா நோய் அனோபிலிஸ் எனப்படு;ம் நுளம்பு வாயிலாகப் பரவுகிறது என்பதையும் கண்டுபிடித்தார். இவ் ஆய்வுக்காக நோபல் பரிசும் பெற்றார்.


      27. ஏ.என்.வைட்கெட்
      (யு.N.றூவைநாநயன) கி.பி
      1861 - 1947 அளவையியல்
      கணிதம் பேட்டன் ரசலுடன் இணைந்து எழுதிய Pசinஉipயை ஆயவாயஅயவiஉய நவீனஅளவையியலின் வளர்ச்சிக்கு உதவியது    கணிதநுட்பத்தினால் டுழபiஉ ஐ வளர்த்தார்
      கணிதம், மெய்யியலுக்கிடையிலான அளவையியல் தொடர்பைக் காட்டினார்.


      28. இறதபோட்
      (சுரவாநசகழசன) கி.பி
      1871 - 1937 பௌதீகம் அணுக்கொள்கையை வெளியிட்டார்.   அணுக்களில் உள்ள அல்பா கதிர், பீற்றா கதிர், புரோத்தன், அணுமாறல் கொள்கையை கண்டுபிடித்து விளக்கினார்
      அணுவின் கட்டமைப்பை ஞாயிற்றுத்தொகுதியின் கட்டமைப்புடன் விளக்கினார்


      29. பேட்டன்ட் றசல்;
      (டீநசவசயனெ சுரளளநட) கி.பி
      1872 - 1970 அளவையியல்
      கணிதம் வைட்கெட்டுடன்; இணைந்து எழுதிய Pசinஉipயை ஆயவாயஅயவiஉய நவீனஅளவையியலின் வளர்ச்சிக்கு உதவியது    கணிதம், மெய்யியலுக்கிடையிலான அளவையியல் தொடர்பைக்காட்டினார். கணித நுட்பத்தினால் டுழபiஉ ஐ வளர்த்தார்


      30. அலெக்சாந்தர் பிளமிங்  ( யுடநநஒ யனெநச குடநஅiபெ ) கி.பி
      1881 - 1655 மருத்துவம்
      இரசாயணம்
      நுண்ணுயிரியல் தற்செயவான நிகழ்ச்சி மூலம் பென்சிலின் எனும் விஷ நுண்ணுயிர்க் கொல்லியை கண்டுபிடித்தார்.
      மனிதனின் கண்ணீர் கிருமியை அழிக்கவல்லது என்பதைக் கண்டுபிடித்தார்.
      மருத்துவத்துறையில் மேற்கொண்ட ஆய்வுகளுக்காக நோபல் பரிசைப் பெற்றார்


      31. ஜே.எம்.கெயின்ஸ்
      ( து.ஆ.முநலளெ ) கி.பி
      1883 - 1946 பொருளியல் நவீன நாணயக் கணியக் கோட்பாட்டின் மூலகர்த்தா எனப்படுகிறார்.   பணம், தொழில், வட்டி பற்றிய தத்துவங் களைக் கூறி அரசும், மத்திய வங்கியும் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு நன்கு திட்டமிட்ட முறையில் பணநிரம்பலை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.
      நிகழ்தகவு, தொகுத்தறி அளவையியல் பற்றி ஆய்வுசெய்தார்.


      32. ஜோன் வென் 1834 - 1923 அளவையியல்
      கணிதம் வென்னின் வரைபடங்களை அறிமுகப்படுத்தினார்
      குறியீட்டளவையியல் சந்தர்ப்ப அளவையியல், தொகுத்தறி அளவையியலின் தத்துவங்கள் என்ற நூல்களைஎழுதினார்    குறியீட்டளவையியலின் வளர்ச்சிக்கு உதவினார்


      33. நேகல்
      ( நேபயட ) கி.பி
      1910 - 1973 மெய்யியல்
      விஞ்ஞானமுறை உய்த்தறி முறையியலாளர்.
      கருதுகோள் உய்த்தறிமுறை (ர்  ஐ . ஐ  ஃ ர்), விதி உய்த்தறிமுறை இரண்டினதும் பயன்பற்றிக்கூறியவர்
      இவை இயற்கை விஞ்ஞானம், சமூக விஞ்ஞானம் இரண்டிலும் பயன்படக்கூடியது என்றார்.


      34. பிரான்சிஸ் கிறிக்
      (குசயnஉளை ஊசiஉம) கி.பி
      1916 - ? உயிரியல் னு.N.யுஇ சு.N.யு பற்றி ஆய்வு செய்தார். னு.N.யு இன்அமைப்பு, சு.N.யு பரம்பரை அலகுகளைகடத்துதல் பற்றிவிளக்கினார். னு.N.யு ஆனது சு.N.யுயை உருவாக்கி புரதத் தொகுப்பை கட்டுப்படுத்துகிறது என்றார். இதற்காக நோபல்பரிசு பெற்றார்


      35. ஆதர்.சீ.கிளாக்
      (யுசவாரச.ஊ.ஊடயசமந) கி.பி
      1917 - ? விஞ்ஞான புனைகதை இலங்கையில் குடியுரிமை பெற்றுள்ளார். ஸ்டான்லி கிறிக் என்பவருடன் இணைந்து விண்வெளிப்பயனம் பற்றி திரைப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். எதிர்கால விஞ்ஞானப்பயனம், கடல் வாழ் உயிரினம் பற்றியும் எழுதியுள்ளார்.

             
      அமேரிக்க நாட்டு விஞ்ஞானிகள்

      36. பெஞ்சமின் பிராங்ளின்
      (டீநதெயஅin குசயமெடin) கி.பி
      1706 - 1790 பௌதீகம்
      அரசியல் வெப்ப அடுப்பு, மூக்குக்கண்ணாடி, மின்தாங்கி (இடிதாங்கி), மின்னல் ஒரு மின்சாரம் என்பனவற்றை கண்டுபிடித்தார்.     அமேரிக்க சுதந்திரப் பிரகடனம், அரசியல் சாசனம், பிறநாட்டு ஒப்பந்தம் என்பனவற்றில் கையெளுத்திட்டார்.


      37. வில்லியம் ஜேம்ஸ்
      (றுடைடயைஅ துயஅநள) கி.பி
      1842 - 1920 மெய்யியல்
      உளவியல் பயன்பாட்டு வாதத்தை (பயனுடைய எடுப்பே உன்மை) முன்வைத்தார்.   உளவியலில் செய்நிலைக் கோட்பாடை முன்வைத்தார்.
      நூல் :- உண்மையின் பொருள், பல்வேறுவகையான சமய அனுபவங்கள், உளவியல் தத்துவங்கள்


      38. தோமஸ் அல்வா எடிசன்
      (வுhழஅயள யுடஎய நுனளைழn) கி.பி
      1847-1931 பௌதீகம்
      பொறியில் மின் குமிழ், பன்னல் பதிவுக் கருவி (கிரமபோன்), சினிமா படம் எடுக்கும் கமரா, என்பனவற்றைக் கண்டுபிடித்தார்.


      39. கிறஹம் பெல்
      ( புசயாயஅ டீநடட ) கி.பி
      1847 - 1922 தொலைத்தொடர்பு மனிதனின் குரல் ஒலியை கம்பியினூடாக செலுத்தும் தொலைபேசிக் (வுநடநிhழநெ) கருவியைக் கண்டுபிடித்தார்.


      40. வோல்டர் றீட்
      ( றுயவநச சுநநன ) கி.பி
      1851 - 1902 மருத்துவம் இராணுவ வைத்திய அதிகாரி    நெருப்புக் காய்ச்சல், மஞ்சட் காய்ச்சல் என்பனவற்றைக் கட்டுப்படுத்;தும் முறையைக் கண்டுபிடித்தார்.


      41. ஜே.பி.வாற்சன்
      ( து.டீ.றுயவளழn ) கி.பி
      1878 - 1958 உளவியல் உளவியலில் புரட்சிகரமான நடத்தை வாதக் கோட்பாட்டை தோற்றவித்தார்.
      உளவியலில் பரிசோதனை முறைகளை கையாண்டார்.
      குழந்தை உளவியல், மிருக உளவியல் பற்றியும் ஆய்வை மேற்கொண்டார்.


      42. காரென் ஹேர்ணி
      (முயசநn ர்யசநெல) கி.பி
      1885 - 1952 மருத்துவம்
      உளவியல் சிக்மன் புரொய்ட்டின் கருத்துக்களுக்கு ஆதரவளித்த இவர் பெண்கள் மீது எதிர்ப்பால் உணர்வு ஏற்படுகிறது என்ற கருத்தை நிராகரித்தார்.
      ஒருவரது ஆளுமையைத் தீர்மானிக்கும் காரணி சமூகச்சூழல் என்றார் -வைத்திய கலாநிதி


      43. லீனஸ் போலிங்
      (டுiரௌ Pயரடiபெ) கி.பி
      1901 - ? இரசாயணம் இரசாயணம், சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்றுள்ளார்.  அணுக்களின் வடிவ ஒழுங்கமைப்பை கண்டுபிடித்து அதன்படி பொருட்களின் பண்பு பற்றிய முடிவைப் பெற்றார்.


      44. தோமஸ் கூன்
      ( வுhழஅயள முராn ) கி.பி
      1922 - ? மெய்யியல்
      விஞ்ஞானமுறை தொடர்பு வாதத்தின் முன்னோடி
      விஞ்ஞான வரலாற்றை சாதாரணகாலம், புரட்சிக்காலம் எனப்பாகுபடுத்தினார்.
                ஜேர்மன் நாட்டு விஞ்ஞானிகள்


      45. கெப்ளர்
      ( முநிடநச ) கி.பி
      1571 - 1630 வானியல் சூரினைப்பற்றியும், ஏனய கோள்களைப்பற்றியும் ஆராய்ந்து 3விதிகளை முன்வைத்தார். இவையே கெப்ளரின் விதிகள்  தைகோடி பிறாகே திரட்டிய தரவுகளை பயன்படுத்தினார்.
      கொப்பனிக்கஸின் சூரியமையக் தொள்கையை ஏற்றார்


      46. இலைபினிஸ்
      ( டுநiடிnணை ) கி.பி
      1646 - 1716 அளவையியல்
      கணிதம் அறிவு முதல் வாதி (சிந்தனை மூலமே அறிவைப்பெற முடியும்)  குறியீட்டளவையியல் முறைகளை உருவாக்கினார்    போதிய நியாய விதியை முன்வைத்தார்.
      நுண்கணித வளர்ச்சிக்கு உதவினார் கணிக்கும் கருவி கண்டுபிடித்தார்


      47. ஹெகல்
      ( ர்நபநட ) கி.பி
      1770 - 1831 மெய்யியல் கருத்து முதல்வாதி(ஆன்மா அல்லது எண்ணமே முதற்காரணம்)   அளவையியல் நூல் ஒன்றை எழுதினார்.  இயக்கவியல் முறைபற்றி விளக்கினார். மெய்யியலின் வாலாற்றை ஆய்வு செய்தார்.


      48. காள் மாக்ஸ்
      ( முயசட ஆயசஒ ) கி.பி
      1818 - 1883 அரசியல்
      மெய்யியல் ஜனநாயக சோசலிஸம், புரட்சிக் கம்யூனிஸம் என்பனவற்றினை முன்வைத்தார்.
      ஏங்கல்ஸ் உடன் இணைந்து 'கம்யூனிஸ்ட் அற்கிகை' எனும் நூலை வெளியிட்டார். இவரது மாக்சிஸத்தில் இயக்கவியல் பொருள் முதல் வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம், அந்நியமாதல் பற்றி விளக்கியுள்ளார்.    இவரது நூல் 'மூலதனம்'


      49. ஏங்கெல்ஸ்
      ( நுபெடநள ) கி.பி
      1820 - 1895 அரசியல் கால்மாக்ஸ் உடன் இணைந்து 'கம்யூனிஸ்ட் அற்கிகை(ஊழஅஅரnளைவ ஆயnகைநளவழ)' எனும் நூலை வெளியிட்டார்    பாட்டாளி வர்க்கத்திற்காகப் பாடுபட்டார்.


      50. வில்லியம் வூண்ட்ற்
      ( ஏiடாநடஅ றுரனெவ) கி.பி
      1832 - 1920 உளவியல் நவீன உளவியலின் தந்தை.  அமைப்பு நிலைக் கோட்பாட்டினை முன்வைத்தவர்களில் ஒருவர்
      உளவியலில் முதன்முறையாக 1879 ல் லிப்சிக்நகரில் ஆய்வுகூடப் பரிசோதனைக்காக ஆய்வுகூடம் ஒன்றை நிறுவினார்


      51. பிறாகே 1848 - 1925 கணிதம்,அளவையியல்,மெய்யியல் நவீன கணித அளவையியலின் தந்தை
      அளவையியலில் ஆராயப்படும் வாக்கியங்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றார்
      கணிதக்குறியீடுகளை பயன்படுத்தி குறியீட்டு அளவையியலின் வளர்ச்சிக்கு உதவினார்


      52. மக்ஸ் பிளங்
      ( ஆயஒ Pடயமெ ) கி.பி
      1858 - 1947 பௌதீகம் வெப்ப இயக்கவியல் பற்றிய ஆய்வு செய்தார்   பௌதீகத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்
      குவாண்டம் கொள்கைக்கு அடிப்படையான கதிர்ப்பு விதியை முன்வைத்தார்


      53. மக்ஸ் வெபர்
      ( ஆயஒ றுநடிநச ) கி.பி
      1864 - 1920 சமூகவியல் சமயச் சமூகவியல் பற்றி எழுதியவர்    சமூகவியலுக்கான முறைகளை உருவாக்க முயன்றார்.
      சமூகச் செயற்பாடுகள் அனைத்தும் முழுமைப் பொருளாதாரம் சார்ந்தவை என்பதை மறுத்தார்.


      54. அல்பேட் ஐன்ஸ்ரைன்
      (யுடடிநசவ நுiளெவநin) கி.பி
      1879 - 1955 பௌதீகம்
      கணிதம் சார்புக் கொள்கையை வெளியிட்டார்.   ஒளி மின் விளைவை (பொட்டாசியம், தங்குதன் மீது ஒளி அலைகள் விழும் போது இலத்திரன் வெளியிடப்படுதல்) பற்றி ஆய்வு செய்தார் இதற்காக நோபல் பரிசு பெற்றார்
      சடப்பொருள்-சக்தி சமன்பாடடு (நுஸ்ரீஆஊ2) , பிறவ்னியன்; அசைவு என்பனவற்றை முன்வைத்தார்


      55. ரூடோல்ப் கானப்
      (சுரனழடக ஊயசnயி) கி.பி
      1891 - 1970 மெய்யியல்
      விஞ்ஞானமுறை வியன்னா வட்டத்தைச் சேர்ந்த முன்னனி தர்க்கப் புலனறி வாதி
      மொழிப் பகுப்பாய்வு, நிகழ்தகவுக் கோட்பாடு என்பனவற்றிற்குப் பங்களிப்புச் செய்துள்ளார்.


      56. ஹைசன்பேக்
      ( ர்நளைநnடிநசப ) கி.பி
      1901 - 1976 பௌதீகம் நிர்ணயமின்மைத் தத்துவத்தை முன்வைத்தார்.
      குவாண்டம் பொறிமுறையை உருவாக்கினார்.  இதற்காக நோபல் பரிசைப் பெற்றார்.


      57. காள் ஹெம்பல்
      ( ஊயசட ர்நஅpநட ) கி.பி
      1905 - 1971 மெய்யியல்
      விஞ்ஞானமுறை விஞ்ஞானத்தில் உய்த்தறி வாய்ப்புப் பார்த்தல் வாதம், விதி உய்த்தறி விளக்கத்தை அறிமுகம் செய்தார்    இவர் ஒரு உய்த்தறி முறையியளாளர்
      அனுபவ விஞ்ஞானங்களுடன் அளவையியல்தொடர்புடைய விஞ்ஞானமுறையை முன்வைத்தார்
                பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள்


      58. டேக்காட்
      ( னுநளஉயசவநள ) கி.பி
      1596 - 1656 மெய்யியல்
      பௌதீகம் அறிவு முதல் வாதத்தின் தந்தை    பொறிமுறைவாத உலகநோக்கின் முன்னோடி
      இவரது இருமை வாதம் (உடலும் மனமும் வௌ;வேறானது) உளவியலுக்கு அடிப்படையானது
      ஒளியியல் பற்றி ஆய்வு செய்துள்ளார்


      59. பாஸ்கல் 1623 - 1662 கணிதம்
      பௌதீகம் கணிக்கும் பொறியைக் கண்டுபிடித்தார் ,பாரமானியின் தொரிசொல்லியின் பரிசோதனையை முன்வைத்தார்    கேத்திரகணிதம் , நிகழ்தகவு பற்றிக்கூறினார்
      வெற்றிடம், வழியமுக்கம் போன்ற கொள்கைகளை முன்வைத்தார்


      60. ரூஸோ
      ( சுழரளளநயர ) கி.பி
      1712 - 1776 அரசியல்
      மெய்யியல் சமூக ஒப்பந்தக் கொள்கையை முன்வைத்தார் (குடியாட்சி)   கல்வியியல் பற்றிக் கூறியுள்ளார் 'எமிலி' என்ற இவரது நூல் மாணவர்களின் கல்வி பற்றியதாகும்.


      61. இலவோசியர்
      ( டுயஎழளநைச ) கி.பி
      1743 - 1794 இரசாயணம் ஒட்சிசன் வாயுவைக் கண்டுபிடித்தார்.   தகனத்திற்குக் காரணம் ஒட்சிசன் எனக்கூறி புளோஜிஸ்தன் கொள்கையை நிராகரித்தார்   திணிவுக் காப்பு விதியை முன்வைத்தார்.
      நீரில் ர்இழு உள்ளதெனக் காட்டினார்.


      62. லாமார்க்
      ( டுயஅயசஉம ) கி.பி
      1744 - 1829 உயிரியல் முதன் முறையாக உயிரியல் பரிநாமக் கொள்கையை முன்வைத்தார்.   உயயோகமும் உபயோகமின்மையும், பெற்ற உரிமைகள் தலைமுறையுரிமை அடைதல் போன்ற முக்கியமான விடயங்களின் மூலம் விளக்கினார்.


      63. லாபிளாஸ்
      ( டுயிடயஉந ) கி.பி
      1749 - 1827 வானியல்
      கணிதம் வான்புகையுருக் கோட்பாட்டினை முன்வைத்து அதன்மூலம் ஞாயிற்றுத் தொகுதியின் தோற்றம் பற்றிக் கூறியுள்ளார்.  நியூட்டனின் புவியீர்ப்பை சூரிய குடும்பத்திற்கு பிரயோகித்தார்.
      கணித ரீதியான வானியல் ஆய்வுக்கு வழிவகுத்தார்.


      64. லூயி பாஸ்டர்
      (டுழரளை Pயளவநரச) கி.பி
      1822 - 1895 நுண்ணுயிரியல்
      மருத்துவம் நொதித்தல், பட்டுப்பூச்சி நோய் என்பனவற்றிற்குக் காரணம் நுண்ணுயிர்கள் என்பதைக்கண்டுபிடித்தார்.
      பால், வைன் முதலிய பொருடகள் பழுதடையாமல் பாதுகாக்கும் முறையான பாஸ்டர் முறையைக் கண்டுபிடித்தார்    விசர்நாய்க்கடியால் ஏற்படும் நீர்வெறுப்புநோய், அம்மை நோய் என்பனவற்றுக்கான தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்தார்   தன்னிச்சைப் பிறப்புக் கொள்கையை பொய்ப்பித்தார்    கட்டுப்பாட்டுக் குளு முறையை பயன்படுத்தினார்


      65. அல்பிரட்பீனே 1857 - 1911 உளவியல் நுண்ணறிவு ஈவு அளவீட்டு முறையை முன்வைத்தார்   கிரகித்தல், கண்டுபிடித்தல், நெறிப்படுத்தல், திறனாய்தல் ஆகிய திறன்களே நுண்ணறிவு என்றார்.
                ஆஸ்திரிய நாட்டு விஞ்ஞானிகள்


      66. கிறகர் மென்டல்
      (புசநபழச ஆநனெநட) கி.பி
      1822 - 1884 பிறப்புரிமையியல்
      பாதிரி பிறப்புரிமையியலின் தந்தை   மென்டலின் பாரம்பரியம் பற்றிய கொள்கையானது தனிப்படுத்துகை விதி, தன்வயத்த விதி என்ற இரு விதிகளை உள்ளடக்கியது.


      67. ஏர்னஸ்ட் மாஹ்
      ( நுசநௌவ ஆயஉh ) கி.பி
      1838 - 1916 பௌதீகம்
      விஞ்ஞானமுறை விஞ்ஞானம் புலக்காட்சிக்கு உட்படக்கூடிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டே செயற்படவேண்டும் என்றார்.
      பௌதீகவதீதத் தன்மையை விமர்சித்த இவர் யதார்த்த வாதக் கோட்பாட்டை முன்வைத்தார்.
      விமானப் பறப்பு வேகத்தை அளவிடும் மாஹ் இலக்கம் (ஆயஉh ரேஅடிநச) எனும் அளவீட்டுக் கருவியை கண்டுபிடித்தார்.


      68. சிக்மன் பிராய்ட்
      (ளுபைஅரனெ குசநரன) கி.பி
      1856 - 1936 உளவியல்
      உளமருத்துவம் மன இயக்க ஆராட்சியின் தந்தை   உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு, ஆளுமை விருத்திக்கோட்பாடு கனவுகளின் வியாக்கியானம் என்ற நூலில் கனவுகள் நனவிலி மனதிலிருந்து தோற்றம் பெறுவதாக கூறுகின்றார்.    மனிதநடத்தையை பாலியலும் தீர்மானிக்கின்றது என்றார்


      69. காள் பொப்பர்
      ( முயசட Pழிpநச ) கி.பி
      1902 - 1994 விஞ்ஞான முறை
      மெய்யியல் உய்த்தறி பொய்ப்பித்தல் கோட்பாட்டை முன்வைத்தார். (ர்ஐ. ஷஐ ஃ ஷர்). இதன்படி விஞ்ஞானக் கோட்பாடுகள் அனுபவச்சோதனைகளின் மூலம் பொய்ப்பிக்கப்படலாம் (நீக்குதல் மூலம் விஞ்ஞானம் முன்னேற்றம் அடையும்)    இக்கோட்பாட்டின் படி மாக்சிசக்கோட்பாடும் உளப்பகுப்புக்கோட்பாடும் விஞ்ஞானமல்லாதவை எனநிராகரிக்கப்பட்டது


      70. கர்ட் கடெல்
      ( முரசவ புழனநட ) கி.பி
      1906 - 1978 கணிதம்
      அளவையியல் கடெல் நிரூபனம் (புöனநட'ள Pசழழகள) என்ற வெளிப்படை உண்மைகளை முன்வைத்தார் (அளவையியல் கணித முறைக்குள்ளும் உண்மை அல்லது பொய் என நிறூபிக்க முடியாத எடுப்புக்கள் உள்ளன.)


      71. சிம்மெல்வைஸ்
      ( ளுiஅஅநடறநளைள ) ------------ மருத்துவம் வைத்தியர்கள் நோய்க்கிருமி எதிர்ப்பு முன்னாயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிடின் நோயாளிகளுக்கு நோய் பரவக்கூடும் எனக்கூறினார்.
               இந்திய நாட்டு விஞ்ஞானிகள்


      72. ஜே.சி.போஸ்
      ( து.ஊ.டீழளந ) கி.பி
      1858 - 1937 பௌதீகம்
      கணிதம் மின்சாரம், ஒளி பற்றிய ஆய்வு, தாவர வளர்ச்சிக் கருவியான கிறெஸ்கோகிறாவ் (ஊசநளஉழ புசயிh) கருவியைக் கண்டுபிடித்தார்.    விலங்குகளைபோலவே தாவரங்களுக்கும் புலனுணர்ச்சி, தூண்டல் துலங்கல் உண்டு எனக்காட்டினார்.


      73. இராமானுஜன்
      ( சுயஅயரெதயn ) கி.பி
      1887 - 1920 கணிதம் கணிதத் தேற்றங்கள் சிலவற்வைக் கண்டுபிடித்தார்   பல கணிதப் புதிர்களை தோற்றுவித்தார்
      கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஆனார்   .


      74. சி.வி.இராமன்
      ( ஊ.ஏ.சுயஅயn ) கி.பி
      1888 - 1970 பௌதீகம் இராமன் விளைவு என்பதைக்கண்டுபிடித்தார் – திண்ம ஃ திரவ ஃ வாயு ஊடகங்களுடாக ஒளியை செலுத்தும் போது சிதறலடைந்து அதன் அலைநீளம், அதிர்வெண் என்பனவற்றில் மாற்றம்ஏற்படுகின்றது
      அணுவைப் பற்றியும் , ஒளியைப்பற்றியும் ஆய்வுசெய்தார்.   நோபல் பரிசு பெற்றார்.


      75. சந்திரசேகர்
      (ஊhயனெசயளநபயச) கி.பி
      1910 - ? பௌதீகம், கணி தம், வானியல் சிக்காகோ பல்கலைக் கழகத்தில் ஆராட்சியாளராக பணிபுரிந்தார்.
      வானம் நீலநிறமாகக் காணப்படுவதற்குரிய காரணத்தை விளக்கினார்
      பால்வீதியில் உள்ளநட்சத்திரங்களின் இயக்கம் பற்றிகூறியுள்ளார்    நோபல்பரிசுபெற்றார்


      76. அமத்திய சென் ------------ பொருளியல் மனிதனின் ஆற்றலுக்கும் வாழ்க்கைத் தரத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டினார்
      பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்றார்


      77. அப்துல் கலாம் கி.பி
      1931 - ? பௌதீகம்
      அணுவிஞ்ஞானம் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பும் ரொக்கட் தயாரிப்பு , நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தயாரிப்;பு      1997 இல் இந்தியாவின் உயர்விருதான பாரதரத்னா விருது பெற்றார்,  2002 முதல் இந்தியாவின் குடியரசு தலைவர்


      78. இராதாகிருஸ்ணன் தத்துவம் கீழைத்தேய தத்துவத்தில் முக்கிய பங்குவகிக்கின்றார் , வேதாந்த தத்துவத்தின் ஒழுக்க நெறிகளை வெளிப்படுத்தினார்

      இரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள்


      79. மென்டலீவ்
      ( ஆநனெநடநநஎ ) கி.பி
      1834 - 1907 இரசாயணம் மூலகங்களின் இயல்புகளுக்கேற்ப ஆவர்த்தன அட்டவணையை அமைத்தவர்.   இதன்படி இன்னும் அறியப்படாத மூலகங்கள் இருப்பதாக எதிர்வு கூறினார்.


      80. பவ்லோவ்
      ( Pயஎடழஎ ) கி.பி
      1849 - 1936 உளவியல்
      உடலியல் தூண்டல் துலங்கல் கோட்பாடு எனும் உளவியல் கோட்பாட்டை முன்வைத்தார்.
      இவர் ஒரு நடத்தை வாத உளவியளாளர்  நோபல் பரிசு பெற்றவர்
      உடலியலில் சமிபாடு, நரம்புத் தொகுதி, மூளையின் தொழிற்பாடு பற்றி ஆராய்ந்தார்


      81. லெனின்
      ( டுநnin ) கி.பி
      1870 - 1924 அரசியல்
      கம்யூனிஸம் ரஷ்ய ஒக்டோபர் புரட்சிக்கு (1917) தலைமை தாங்கி பின்னர் ரஷ்ய அரசாங்கத்திற்குத் தலைம தரங்கினார்    மாக்ஸிசத்தை முன்னெடுத்தார்.
      பொருள் முதல் வாதமும் அனுபவ வாதமும் என்றை நூலை எழுதினார்.


      82. லைசெங்கோ
      ( டுலளநமெழ ) கி.பி
      1898 - 1976 தாவரவியல் பிறப்புரிமையியல் பற்றி ஆய்வை மேற்கொண்டார்
      சூழல் மாற்றங்களுக்கேற்ப பழைய பயிரினங்களிலிருந்து புதிய பயிரினங்களை பெறலாம்.
      பரம்பரை அலகுகளின் தன்மையிலே பரம்பரை இயல்பு கடத்தப்படாது என்றார்
                இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள்


      83. லியனாடோ டாவின்சி (டுநழயெசனழ னுயஏinஉi) கி.பி
      1452 - 1519 பொறியியல்
      ஓவியம் விமானம் , பரசூட் என்பனவற்றிற்கான வடிவ அமைப்புக்களை வரைந்தார்.
      புலமையாளரின் முறைகளையும் கைவினையாளர்களின் முறைகளையும் ஒன்றினைத்தவர்களில் ஒருவர்
      மோனலிசா, கடைசி இராப் போசனம் போன்ற ஓவியங்களை வரைந்தவர்


      84. கலிலியோ
      ( புயடடைநழ ) கி.பி
      1564 - 1642 பௌதீகம்
      கணிதம் கலிலியோவின் விதி (சுயாதீனமாக விழும் பொருட்கள் புவியின் மேற்பரப்புக்கருகில் நிலையான வேகததைக் கொண்டிருக்கும்)    ஊசல் தத்துவத்தைக் கண்டுபிடித்தார்
      வானியல் தொலைகாட்டியைக் கண்டுபிடித்தார்.


      85. மார்க்கோனிஆயசஉழni 1874 - 1937 பௌதீகம் வானொலியெக் கண்டுபிடித்தார்.   கம்பியில்லாத் தந்தியைக் கண்டுபிடித்தார்.
                போலந்து நாட்டு விஞ்ஞானிகள்


      86. கொப்பனிக்கஸ்
      ( ஊழிநசniஉரள ) கி.பி
      1473 - 1543 வானியல் சூரிய மையக்கொள்கையை முன்வைத்தார். இதன்மூலம் தொலமியின் புவிமையக் கொள்கையை நிராகரித்தார்.    பூமி தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றுவதால் இரவு பகல் ஏற்படுகிறது என்றார். வானியல் புரட்சி செய்தவர்


      87. மேரி கியூரி
      ( ஆயசi ஊரசநை ) கி.பி
      1867 - 1934 இரசாயணம் தனது கணவரோடு இணைந்து உயர் கதிர் இயக்கத்தைக் கொண்ட ரேடியம், பொலோனியம் என்ற மூலகங்களை கண்டுபிடித்தார். இந்த ரேடியம் புற்றுநோய்க்கான சிகிட்சைகளுக்கு உதவுகிறது  1903,1911 இல் நோபல்பரிசு பெற்றார்
                சுவிற்சலாந்து நாட்டு விஞ்ஞானிகள்


      88. அல்பிரட் நோபல் 1833 - 1896 இரசாயணவியல் டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தார்   இவரின் நினைவாக நோபல் பரிசு வழங்கப்படுகிறது


      89. காள் யுங்
      ( ஊயசட லுரபெ ) கி.பி
      1875 - 1961 உளவியல்
      உளமருத்துவம் பகுப்பு உளவியல் என்னும் புதிய உளவியல் கோட்பாட்டை முன்வைத்தார்
      ஆரம்பத்தில் சிக்மன் புரொய்ட் இன் கருத்திற்கு ஆதரவளித்hர்பின்னர் 'உணர்விலி மன உளவியல்' என்றநூலில் எதிரான கருத்துக்களையும் முன்வைத்தார்   கூட்டு நனவிலி மனது –அறிமுகம்
      ஆளுமையின் அடிப்படையில் மனிதர்களை அகமுகிகள், புறமுகிகள் எனவகுத்தார்.


      90. ஜீன் பியாஜே
      ( துநயn Pயைபநவ ) கி.பி
      1896 - 1980 உளவியல் அறிகை(அறிவுசார்)உளவியல் , குழந்தை உளவியல்களை வளப்படுத்தினார்
      பிறப்பு முதல் கட்டிளமைப்பருவம் வரையான நுண்ணறிவு வளர்ச்சியை மூன்று கால கட்டங்களாக வகுத்தார். கல்வி உளவியல் அறிவாராட்சியியல் போன்றனவற்றில் ஆய்வுமேற்கொண்டார்
                அயர்லாந்து நாட்டு விஞ்ஞானிகள்


      91. றொபேட் பொய்ல்
      (சுழடிநசவ டீழலடந) கி.பி
      1627 - 1691 பௌதீகம்
      இரசாயணம் பொய்லின் விதி (வெப்பநிலை மாறாதிருக்கையில் ஒரு குறிப்பிட்ட திணிவுடைய வாயுவின் கனவளவு அதன் அமுக்கத்திற்கு நேர்மாறுவிகித சமனாகும்)   குறைந்த அமுக்கநிலையில் திரவங்களின் கொதிநிலை, உறைநிலை, பாரமானியின் செயற்பாடு பற்றி ஆய்வுசெய்தார்
      காற்றடிக்கும் பம்பியைக் கண்டுபிடித்தார்


      92. ஜோர்ஜ் பூல்
      ( புழசபந டீழழடந ) கி.பி
      1815 - 1864 அளவையியல்
      கணிதம் அளவையியல் கூற்றுக்களை குறியீட்டில் அமைக்கும் குறியீட்டளவையியலின் வளர்ச்சிக்குஉதவியவர்
      பூலியன் அட்சரகணிதம் (டீழழடநயn யுடபநடிசய) மூலம் பல துறைகளில் பிரச்சினைகளை தீர்த்தார்
                ஸ்கெட்லாந்து நாட்டு விஞ்ஞானிகள்


      93. ஜேம்ஸ் வாட்
      (துயஅநள றுயவவ) கி.பி
      1736 - 1819 பொறியியல் நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தார் (1769)   நட்சத்திரங்களுக்கிடையிலான தூரத்தை அளக்கும் கருவி , நகல் எடுக்கும் இயந்திரம் என்பனவற்றைக் கண்டுபிடித்தார்.
      கினெஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார்


      94. டேவிட் ஹியூம்
      (னுயஎனை ர்ரஅந) கி.பி
      1711 - 1776 மெய்யியல் அனுபவ வாதியும் , ஐயவாதியும் ஆவார்   காரண காரிய முறையை விமர்சித்து தவறு எனக்கூறினார்   தொகுத்தறி அனுமானம் உய்த்தறி சார்ந்ததல்ல எனக் கூறினார்.
      இங்கிலாந்தின் வரலாறு, ஒழுக்கவியல், சமயம், மனிதஇயல்பு, தற்கொலை, பற்றி நூல்எழுதியுள்ளார்
                டென்மார்க் நாட்டு விஞ்ஞானிகள்


      95. தைகோ டீ பிறாகே
      (வுலஉhழ னுந டீசயாந) கி.பி
      1546 - 1601 வானவியல்
      கணிதம் மினோவா என்னும் நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தார்  கெப்ளரின் கண்டுபிடிப்புக்களுக்கு இவர் திரட்டிய தரவுகளே பெரிதும் உதவின.   கோள்கள் சூரியனைச்சுற்றி வலம் வருகின்றன ஆனால் சூரியனும் ஏனய கோள்களும் பூமியைச் சுற்றி வலம் வருகின்றது என்ற ஞாயிற்றுத் தொகுதி பற்றிய விளக்கத்தை முன்வைத்தார்.


      96. நீல்ஸ் போர்
      (நேடைள டீழாச) கி.பி
      1885 - 1962 பௌதீகம் அணுக்கொள்கையை விருத்தி செய்து அணுநிறமாலை, எக்ஸ் கதிர்கள் பற்;றி விளக்கினார்
      இலத்திரன்கள் ஓர் ஒழுக்கிலிருந்து மற்றொரு ஒழுக்கிற்குச் செல்லும் போது சக்தி காவப்படலாம் என்றார்    நோபல் பரிசு பெற்றார்
                ஏனைய நாட்டு விஞ்ஞானிகள்


      97. ஸ்பினாசோ
      ( ளுpiழெணய ) கி.பி
      1632 - 1677 மெய்யியல் நெதர்லாந்து    அறிவுமுதல் வாதி, அனுபவ வாதத்தை நிராகரித்தார்  சமயச்சிந்தனையாளர் , மொனாட் என்ற ஆன்மக்கொள்கையை முன்வைத்தார்   ஒழுக்கவழிமுறைகளை எடுத்துக்காட்டியவர்


      98. கரலோஸ் லினேயஸ்
      (ஊயசழடரள டுinயெநரள) கி.பி
      1707 - 1778 தாவரவியல் சுவீடன்   தாவரங்களையும் விலங்குகளையும் வகைப்படுத்தி தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் (சாதிப்பெயர், இனப்பெயர் மூலம்) பெயரிடும் நவீன விஞ்ஞான முறையை உருவாக்கினார்


      99. இம்மானுவல் கான்ற்
      (ஐஅஅயரெநட முயவெ) கி.பி
      1724 - 1804 மெய்யியல் பிறஷ்யா  அறிவாராட்சியியலில் ஆய்வுமேற்கொண்டு அறிவைப்பிரதிபலிக்கும் எடுப்புக்களை 4 வகைப்படுத்தினார்    அறிவுமுதல் வாதத்தையும் அனுபவ வாதத்தையும் ஒன்றினைத்து மெய்யியல் கருத்துக்களை முன்வைத்தார்.


      100. வில்லியம் றொன்ஜன்
      (றுடைடயயைஅ சுழவெபநn) கி.பி
      1845 - 1923 பௌதீகம் ஒல்லாந்து    சாதாரண ஒளி ஊடுருவிச் செல்லமுடியாத ஊடகங்களினூடாக செல்லக்கூடிய  கதிர்களைக் கண்டுபிடித்தார் (ஓ – கதிர்கள்) , எக்ஸ் கதிர் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்.


      101. கிரான்ட் பேன்டிங் 1891 - 1941 மருத்துவம் டயபிற்றிக் என்ற நோயைக்கட்டுப்படுத்தும் இன்சுலின் மருந்தைக் கண்டுபிடித்தார், இதற்காக 1923 நோபல் பரிசு பெற்றார்


      102. யூக்காவா
      ( லுரமயறய ) கி.பி
      1907 - ? பௌதீகம் யப்பான்   அணுவில் 'மீசன்'; நுண் அணுத்துனிக்கை உள்ளது எனஎதிர்வு கூறினார் பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டது     பௌதீகத்திற்கான நோபல் பரிசைப் பெற்றார்.


      103. கிறிஸ்டியன்பேனாட்
      (ஊhசளைவயைnடீயசயெசன) கி.பி
      1922 - ? மருத்துவம்
      சத்திரசிகிட்சை தென்னாபிரிக்கா   மனித இதயமாற்று சிகிட்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட முதல் வைத்தியர் , மீண்டும் 11வது சிகிட்சையில் பழைய இதயத்தை நீக்காமல் புதிய இதயத்தைப் பொருத்தி இரட்டைப்பம்புதல் ஏற்படுத்தினார்


      104. அப்துஸ் சலாம்
      (யுடினரள ளுயடயஅ) --------- பௌதீகம் பாக்கிஸ்தான்    நுண் அணுப் பௌதீகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அணு ஆயுத கட்டுப்பாட்டிற்குப் பங்களிப்புச் செய்தார்
      பௌதீகத்தில் மேற்கொண்ட ஆய்வுக்காக நோபல் பரிசைப் பெற்றார்.


      105. என்.ஆர்.ஹன்சன்
      ( N.சு.ர்யளெழn ) ---------- விஞ்ஞானமுறை விஞ்ஞானமுறையில் இருவகைஉண்டு எனக்காட்டினார் (1 - கண்டுபிடிப்புக்கான தர்க்கம்,
         2 - நியாயப்படுத்தலுக்கான தர்க்கம்) விஞ்ஞான முறையியலாளர்களின் பணி நியாயப்படுத்தலுக்கான      
        தர்க்கத்தை விளக்குதல் என்றார்


      106. இமயர்லக்காதொஸ்
         (ஐஅசந டுயுமயவழள) ---------- விஞ்ஞானமுறை ஒரு விஞ்ஞானத்துறையில் ஈடுபடுகின்ற அனைவரும் பொதுவான ஓரு ஆய்வுத்திட்டத்தின் படி செயற்படுதல் வேண்டும் என்பதை முன்மொழிந்தார்