அகரம்: விஞ்ஞானத்தின் வரலாறு - History of Science

விஞ்ஞானத்தின் வரலாறு - History of Science



பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். கல்லாலான ஆயுதங்களையும், எலும்பு கொம்புகளினாலான ஆயுதங்களையும்; உருவாக்கியமைக்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நீர்வழிப் பிரயாணங்களுக்காக வள்ளங்களும், தெப்பங்களும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படி நிலைகளிலேயே விஞ்ஞானம் அக்காலம் முதல் தற்காலம் வரை வளர்ச்சியடைந்து வந்தது. இந்த அடிப்படையில் விஞ்ஞானத்தின் வரலாற்றை சரியாக விளங்கிக் கொள்வதற்கு அவற்றினுடைய வளர்ச்சிக் கட்டங்களை ஒவ்வொன்றாக ஆராய வேண்டியுள்ளது. அவை பின்வருமாறு.


1. கிரேக்கர் கால விஞ்ஞானம்.
2. சீனர் கால விஞ்ஞானம்.
3. அரேபியர் கால விஞ்ஞானம்.
4. மத்திய கால விஞ்ஞானம்
5. மறுமலர்ச்சிக் கால விஞ்ஞானம்
6. தற்கால விஞ்ஞானம்.

கிரேக்கர் கால விஞ்ஞானம்

சீனா, இந்தியா, மத்திய அமெரிக்கா, மொசப்பத்தேமியா போன்ற ஆதி நாகரீகங்களில் வானியில் ஆய்வுகள் முக்கியம் பெற்றிருந்த போதும் அவை முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகளாக இருக்கவில்லை. கிரேக்கர்களே இயற்கைத் தோற்றப்பாடுகள் பற்றிய முறைப்படுத்திய ஆய்வுகளை ஆரம்பித்தனர். ஆதிகிரேக்க மெய்யியல் அறிஞர்கள் உலகின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானத்தில் ஏற்கப்பட்டது.

தேலீஸ் (கி.மு. 535-475) என்பவர் இயற்கையின் பன்மைத் தன்மையை ஆய்வு செய்தார். 'நீர்' தான் உலகின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினார். பௌதீகப் பொருளைக் கொண்டு ஏனையவற்றை ஆக்கமுடியும் என்ற வகையில் இக்கருத்து ஏற்கக்கூடியதே. அனெக்சி மாந்தர் (கி.மு. 611-547) புவியியல், வானியல் பற்றிய கருத்துக்களை வெளியிட்டதுடன் பரிணாமக் கோட்பாட்டின் சில முக்கிய கருத்துக்களையும் வெளியிட்டர். அதாவது நீரிலிருந்தே உயிரினங்கள் தோன்றின எனவும், நீர் வற்றியபின் அவை நிலத்தில் வாழத் தொடங்கும்போது சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றி நிலப்பிராணிகளாக வாழத் தொடங்கின எனவும் கூறினார். அனெக்சிமினில் என்பவர் உலகின் தோற்றத்துக்குக் காரணம் காற்று எனக் கூறினார். ஹெக்காட்டஸ் என்பவர், மாற்றம் ஒன்றே உண்மையானது உலகின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நெருப்பு எனக் கூறினார். லூயிசிப்ஸ் என்பவரே சடப்பொருட்களின் அணுக்கொள்கையின் ஆரம்பகர்த்தாவாகும். இவரின் மாணவனான 'டெமோ கிரட்ஸ்' (கி.மு. 470-400) என்பவரை தற்கால அணுக்கொள்கையின் முன்னோடியாவர். பைதகரஸ் என்பவர் தனது பாடசாலையில் எண் சார்ந்த அறிவைப் போதித்தார். அட்சர கணிதம், கேத்திர கணிதம் என்பவை இவராலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது. 'அல்மியன்' என்பவர் உயிர் உள்ள பொருட்களை விஞ்ஞான ரீதியாக வெட்டிச் சோதித்து மூளையிலிருந்து கண், வாய், காது போன்ற உறுப்புகளுக்கு நரம்புகள் செல்லுகின்றன என்பதை அவதானித்தார். 'எம்பிடோக்கிளஸ்' (கி.மு. 500-430) உடல் சூட்டிற்குக் காரணம் இரத்தம் எனவும் இருதயமே குருதித் தொகுதியின் மையம் எனவும் கூறியுள்ளார். அனெக் சோகிறஸ் (கி.மு. 488 - 428) வானியியல் செய்த ஆய்வுகள் கிரேக்கத்தின் புதிய அறிவு வளர்ச்சிக்கு வழி வகுத்தது. 'ஹிப்போகிரட்டீஸ்'  வைத்தியத்துறையில் பல ஆய்வுகளைச் செய்தார். இவர் மருத்துவத்தில் அனுபவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நோய்களுக்குக் காரணம் இறைவனுடைய நிகழ்வுகளே என்பதை மறுத்து மனிதன் வாழும் சூழலே நோய்களுக்குக் காரணம் எனக் கூறினார். இவருடைய காலத்திலேயே கலைக் கூடங்கள், மருத்துவபீடம், கணிதபீடம் என இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டுப் போதனைகள் நடாத்தப்பட்டன. 'பிளேட்டோ (கி.மு. 427-347) தனது கலாசாலையில் விஞ்ஞானம், தத்துவம், இறையியல், கேத்திர கணிதம், வானியல் போன்ற அறிவுத்துறைகளைக் கற்பித்தார். இவர் விஞ்ஞான சிந்தனைக்கும் சமய தத்துவத் துறைகளுக்குமிடையே உள்ள தொடர்புகள் அறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கணிதம் பற்றிக் கூறும் போது கணிதம் என்பது அளவையியல் ரீதியில் பயிற்சிதரும் ஒரு கருவியாகும் எனவும் கணிதம் தத்துவத்தின் நுழைவாயில் எனவும் குறிப்பிட்டார். ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படும்போது முடிவுபெறும் வரை தொழிற்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் 


அரிஸ்டோட்டிலின் (கி.மு. 384-322) காலாசாலை 'லைசியம்'  என அழைக்கப்பட்டது. அரிஸ்டோட்டிலின் காலம் விஞ்ஞான வரலாற்றில் இரு காரணிகளால் முக்கியத்துவம் பெறுகின்றது.
(1) அவர் செய்த விஞ்ஞானப் பணிகள்
(2) உலக வரலாற்றில் ஒரு விஞ்ஞான ஆய்வுக்காக அரசிடமிருந்தும் முதன் முதலில் பணம் பெற்றமை. (இதன்பின் நூற்றாண்டுகளாக இவ்வுதவி வழங்கப்படவில்லை)
இவர் எழுதியதாகக் கூறப்படும் 170 நூல்களில் 47 நூல்கள் இன்று கிடைக்கப்பெறுகின்றன. இந் நூல்கள் அவர் காலத்திய விஞ்ஞான உண்மைகள் அடங்கிய கலைக்களஞ்சியமாக விளங்குகின்றன. இவர் வானியல், விலங்கியல், கருவியியல், புவியியல், உடலியல், இராசாயணம், உடற்கூற்றியல், பௌதீகம், ஆகியவை குறித்து பண்டைய கிரேக்கர் அறிந்திருந்த அனைத்தைப் பற்றியும் எழுதியதுடன் மெய்யியல், உளவியல், பொருளியல், இறையியல் அரசியல், சொல்லாட்சியியல், அழகியல், அளவையியல் போன்ற துறைகள் பற்றியும் எழுதியுள்ளார். இதிலிருந்து இவருடைய எழுத்துக்கள் அறிவின் முழுப்பரப்பையும் தழுவியுள்ளதென்பதை அறியலாம். அரிஸ்டோட்டில் ஒரு இயற்கைவாதி, இவருடைய முதல் அவதானம் உயிர்ப்பொருள் பற்றியதாகவே இருந்தது. இதனாலேயே இவரை 'விஞ்ஞான மனிதன்'  என அழைக்கின்றனர். இயூக்கிளிட் (கி.மு. 330 - 266) என்பவர் இயற்றிய 'மூலக்கோட்பாடுகள்' என்ற நூலே இவருக்குப் புகழைத் தேடித்தந்தது, இந்நூலில் தனக்கு முன் இருந்த கணித உண்மைகள் எல்லாவற்றையும் திரட்டி, ஒழுங்குபடுத்தித் திட்டமிட்டு அமைத்துள்ளார். இந்நூல் உய்த்தறி முறையின் அமைப்பினையும் பிரயோத்தையும் மிகத் தெளிவாகக் காட்டுகின்றதெனலாம். இது தளக் கேத்திர கணிதம், திண்மக் கேத்திர கணிதம் பற்றியதாக இருந்தபோதும் அட்சரகணிதம், எண்கணிதம் பற்றிய கோட்பாடுகள் பற்றிய துறைகளின் வளர்ச்சிக்கும் உதவியுள்ளது. மேலும் 'நியூட்டன்' தனது 'பிறின்சிப்பியா' என்ற நூலை ஆக்குதவற்கும் இது உதவியுள்ளது. தற்காலத்தில் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றங்கள் கூட 'இயூக்கிளிட்டின்' விஞ்ஞான முக்கியத்துவத்தை எந்த வகையிலும் குறைத்துவிடவில்லை.

கிரேக்க கால விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி 'ஆக்கிமிடிஸ்' (கி.மு. 287-212) காலத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது.
1. ஆக்கிமிடிஸ் (பையின்) பெறுமானத்தைக் கணித்ததுடன் ( π = 22/7) வட்டத்தின் சுற்றளவு, பரப்பு போன்றவற்கைக் கணிக்கு; வாய்ப்பாடுகளையும் கண்டுபிடித்தார்.
2. நீள்வட்டத்தின் பரப்பினை அறியும் சுருக்க விதிமுறையை உருவாக்கினார்.
3. கப்பித்தொகுதி, நெம்புகோல் தத்துவம், மிதப்பு விதி பற்றியும் ஆராய்ந்தார்.
4. ஒரு பொருள் நீரினுள் அமிழ்ந்திருக்கும் போது அதன் நிறை குறைவடைகின்றது இந்நிறைக் குறைவு அதனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் நிறைக்குச் சமனாகும் என்பதைக் கண்டுபிடித்தவர். இவரது கண்டுபிடிப்பு ஆக்கிமிடிசின் தத்துவம் எனும் பெயரினால் அழைக்கப்படுகின்றது.
5. நீரை மேல் உயர்த்தக்கூடிய ஒரு இயந்திரத்தையும் கண்டுபிடித்தார்.
6. நெம்புகோல், கப்பி போன்றவற்றின் துணையுடன் இயங்கும் பல வகையான யுத்த இயந்திரங்களைக் கண்டுபிடித்தார்.
7. தளவாடிகளின் உதவியுடன் ஒளி சம்பந்தமாக பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பாரிய தளவாடிகளின் உதவியுடன் சூரிய கதிர்களை ஒரு இடத்தில் குவித்து பல ரோமானியக் கப்பல்களை எரியவைத்தாக இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இவருடைய கண்டுபிடிப்புக்கள் யாவும் கணிதம், பௌதீகம், நீர் நிலையியல் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பைச் செய்தன.


சீனர் கால விஞ்ஞனாம்

சீன விஞ்ஞானம் அனுபவ அடிப்படை கொண்டாகும். கோட்பாடுகள் பெரிதும் புராதனமானவையாகவே இருந்தன. வானிவியலில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோதும் கணித முறைகளை அவர்கள் குறைவாகவே கையாண்டனர். வானியல், மருத்துவம், பொறியியல், ஒளியியல், காந்தவியல், யுத்த தளபாடம், வெடிமருந்து, எழுதுதாள், நாட்காட்டி போன்ற பலதுறைகளில் விஞ்ஞான கருதுகோள்களை உருவாக்கி உலகுக்கு அளித்த பெருமையை சீனா தட்டிக் கொள்கின்றது. கி.மு. 2ம், 3ம் நூற்றாண்டளவில் சீனர்கள் நாட்காட்டிகளை துல்லியமாக கணித்தனர். நாட்கள், மாதம் மட்டுமன்றி சந்திர, சூரிய இயக்கங்கள் சந்திர, சூரிய கிரகங்கள் பற்றிய தகவல்களையும் சரியாக குறிப்பிட்டனர். நட்சத்திரங்களை இனங்காண்பதற்கும் அவற்றின் நிலையையும் இருப்பிடத்தையும் அறிவதற்கும் கி.மு. 4ம் நூற்றாண்டளவில் சீனர்களால் நட்சத்திர அட்டவணைகள் தொகுக்கப்பட்டது. கி.மு.6ம் நூற்றாண்டில் சீனர்கள் காந்தவியல் கண்டுபிடிப்பை உலகிற்கு அளித்தனர். காந்தக் திசைமானியை கண்டுபிடிப்பதன் ஊடாக கப்பலோட்டுதல், வானியல், நில அளவை, யுத்த நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு பெருதொண்டு ஆற்றினர். உலகில் அச்சுக்கலையை அறிமுகம் செய்தவர்கள் சீனர்கள் ஆவர். செதுக்கப்பட்ட கற்கள், முத்திரைகள் கொண்டு அச்சுப்பதித்து கோர்த்த நூற்சுவடுகள் பல அகழ்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எழுதுதாள், எழுதுகருவிகள் போன்றவற்றையும் சீனர்களே அறிமுகம் செய்தனர்.

சீனர்களின் மற்றுமோர் கண்டுபிடிப்பு நெருப்புமருந்து என அழைக்கப்படும் வெடிமருந்து கலையாகும். இரசாயன மூலகங்களை அறிந்திருந்த சீனர்கள் நெருப்பு மருந்தின் ஊடாக வெடிமருந்து உற்பத்தி செய்யும் கலையை உலகிற்கு அறிமுகம் செய்தனர். இக்கண்டுபிடிப்பு ஐரோப்பாவில் கி.பி. 13ம் நூற்றாண்டில் தான் அறிமுகமாகியது. சீனர்களின் வைத்தியம் வேதகால நாகரீகத்துக்கு ஒத்தது. இயற்கை வைத்திய முறையையும் ஊசிமுறை வைத்திய முறையையும் நன்கு பிரயோகித்து வந்தனர். இன்றும் கூட சீன ஊசிமுறை வைத்தியம் பல நாடுகளிலும் நடைமுறையில் காணப்படுகின்றன. பாரம்பரிய சீன வைத்தியமுறைக்கு நீண்ட வரலாறு உண்டு. பழைய நாகரீகத்தைச் சேர்ந்த 800 வைத்திய நூல்களை சீனா பெற்றுள்ளது. இவற்றுள் அனேகமானவை சிகிச்சை மருத்துவம் பற்றி எழுதப்பட்டவையாகும். இந்நூல்கள் சீனாவின் பாரம்பரிய வைத்தியக் கலையைக் கூறுகின்றன. சுகாதாரம், சிகிச்சை முறைகள், நோயின் அறிகுறிகள் முதலியனவற்றை இந்நூல்கள் விளக்குகின்றன. சீனர்களின் கைவினைத்திறன் தொழிநுட்ப அறிவுக்கு மிக முக்கியமான சான்று சீனப்பெருங்சுவர் ஒன்றே ஆகும். இச் சுவர் உலக அதிசங்களில் ஒன்றாக அமைகின்றது.

அரேபியர் கால விஞ்ஞானம்

கி.பி. 600 க்கும் 13ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்துக்கும் இடைப்பட்ட காலம் பண்டைய ஆரேபியரின் விஞ்ஞான அறிவின் எழுச்சிக் காலமாகும். கிரேக்க சிந்தனைகளை அரேபியர்கள் நூல்வடிவில் மொழிபெயர்த்து அவற்றை அனுபவ பூர்வமாக தொகுத்து அளித்தவர்கள் ஆவர். பைதரகரசு, அரிஸ்டோட்டில், ஆக்கிமிடிஸ், பிளட்டோ, தொலமி போன்றோரின் மூல நூல்கள் அரபு மொழியல் மொழிபெயர்க்கப்பட்டதால் வானியல், ஒளியியல், இரசாயனவியல், இருத்துவம், கேத்திர கணிதம், அட்சர கணிதம் போன்ற துறைகளில் அரேபிய விஞ்ஞானம் வளர்ச்சியடைந்தது.  புவியியல், வானியல் போன்ற அறிவுத்துறைகளில் அரேபியர்கள் மிகவும் அறிவுடையவர்களாக விளங்கினர். தமது உயிர் வாழ்க்கைக்கும், சமய வாழக்கைக்கும் வானியலையும், கணிதத்தையும் நன்கு பயன்படுது;தினர். இதற்காக வானிலை அவதான நிலையங்களை அமைத்திருந்தனர். வானிலை ஆய்வுக்காக நுட்பமான ஆய்வுக்கருவிகளைக் கண்டுபிடித்து பயன்படுத்தினர். சரி நுட்பமான வானியல் அட்டவணைகளையும் நட்சத்திர அட்டவணைகளையும், சதந்திர நாட்காட்டிகளையும் அனுபவரீதியாக தொகுத்துப் பயன்படுத்தினார்கள். கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரோஜா பேக்கன் என்ற விஞ்ஞானியின் ஒளியியல் கணிதக் கருத்துக்களை ஆதாரங்களாகக் கொண்டு ஒளி பற்றிய ஆய்வில் சிறப்பான பங்கினை வகித்தனர். கி.பி. 965ம் ஆண்டில் பிறந்த இன்னு அல் ஹைத்தாம் கணிதம், பௌதீகம், வானியல், மருத்துவம் போன்ற துறைகளில் அறிஞராக விளங்கினார். இவரது ஒளியியல் தொடர்பான ஆய்வுகள், கருத்துக்கள் சமகாலத்தில் வாழும் பௌதீகவியலாளர்களால் வரவேற்கப்படுகின்றன.

அரேபியர்களின் மற்றுமொரு சிறப்;பானதொரு பங்களிப்பு இரசாயனவியலுக்குரிய கருத்துக்களை முன்வைத்தமையாகும். அரேபியர்கள் இரவாதத்தை அனுபவபூர்வமாக ஆய்வுகூட பரிசோதனைகள் மூலம் நிறுவ முயன்றனர். மூஸா அல் - கவாரிஸ்மி அட்சரகணிதத்திலும், எண்கணிதத்திலும் நூல்களை எழுதினார். இந்நூல்களில் கணிசமான அளவு புதிய விடயங்கள் இருந்தன. ஜாபீர் பின் அப்துல்லா தலைசிறந்த வானியல் கணிதவியலாளராக கருதப்படுகின்றார். இவர் திரிகோண கணிதத்தில் புதிய கண்டுபிடிப்புக்களைச் செய்தார். அபுமூஸா ஜாபீர் இப்னுகையான் புகழ்பெற்ற இரசவாதியும் இரசாயன வியலாளரும் ஆவார். இவர் இரசாயன ஆய்வில் நீள்தல், ஒடுக்கம் ஆகிய இரண்டிற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கமளித்தார். ஆவியாகி நீள்தல், உருகுதல், படிகமாதல் ஆகியவற்றிற்கான முறைகளையும் அவர் செம்மைப்படுத்தினார். எனவே வானியல், புவியியல், கேத்திர கணிதம் வடிவ கணிதம், ஒளியியல், இரசவாதம், வைத்தியம் போன்ற துறைகளில் அரேபியரின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது என்றால் அது மிகையாகாது.


மத்திய காலம்

இக்காலத்தில் தொழிநுட்பம் சார்ந்த விஞ்ஞான வளர்ச்சியே முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்காலத்தில் திசையருகருவி, வில்லைகள், அச்சுக்கலை, நேரமறிதல், இரசாயனமுறைகள் மற்றும் உபகரணங்கள், வெடிமருந்து கூடுகலன்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. இதன் விளைவாக 16ம் நூற்றாண்டில் தோன்றிய கல்வி மறுமலர்ச்சியுடன் விஞ்ஞானப் புரட்சியும் ஆரம்பித்தது.

விஞ்ஞானப் புரட்சியின் விளைவாக ஐரோப்பாவில் இரு சம்பிரதாயங்கள் தோன்றின.
1. அறிவுத் தேவையை நிறைவுசெய்யும் கொள்கை ரீதியாக விஞ்ஞானங்கள்.
2. தொழிநுட்ப தேவையை பூர்த்தி செய்யும் பிரயோக விஞ்ஞானங்கள.;

கொள்கை ரீதியாக விஞ்ஞானங்கள் ஆரம்பத்தில் மெய்யியலின் ஒரு பகுதியாகவே இருந்தது. ஓக்ஸ்போர்;, கேம்பிரிஸ் (இங்கிலாந்து), சோபோன் (பிரான்ஸ்), பாதுவா, பீசா (இத்தாலி) பல்கலைக்கழகங்கள் இறையியல், மெய்யியல் போதனைகளைச் செய்தன. இங்கு அண்டத்தைப்பற்றி போதிக்கப்பட்ட கருத்துக்கள் மத அடிப்படையிலேயே அமைந்திருந்தன. இவை தர்க்க ரீதியாக பெறுமதியற்றவை என ஒல்கம் கீவில்லியம் (கி.பி. 1295 - 1349) என்பவர் எடுத்துக் காட்டினார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரோஜர்பேக்கன் (1214-1294) அறிவைப் பெறுவதற்கு பரிசோதனையை பயன்படுத்த வேண்டும் என்றார். நிக்லோஸ் (கி.பி. 1401 - 1464) என்பவர் ஒரு பொருளை எறிந்து அது விழும் நேரத்தைக் நீர்க்கடிகாரத்தைக் கொண்டு அளந்ததுடன், தாவரங்களை எரித்த சாம்பலைக் கொண்டு அவற்றின் மூலகங்களைப் பற்றிக் கூறினார். இவையெல்லாம் பரிசோதனை முறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டின.

மத்திய காலத்தின் இறுதி நூற்றாண்டுகளில் கேட்பாட்டாளர்கள், கட்டிட கலைஞர்கள், பொறியியலாளர்கள் போன்றோர் உருவாகினர். இத்தாலி நாட்டைச் சேர்ந்த லியானோடா டாவின்சி (கி.பி. 1452 - 1519) மேலே கூறிய மூன்று ஆற்றல்களையும் பெற்றிருந்தார். இவர் ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை போன்றவற்றில் மாத்திரமன்றி வானியல், உடற்கூற்றியல், விஞ்ஞானம், தொழிநுட்பம் ஆகியவற்றிலும் வல்லுனராக இருந்தார். விஞ்ஞானத்தின் வளர்ச்சியானது மத்தியகாலத்தின் இறுதி இரு நூற்றாண்டுகளிலும் மேலும் பல வளர்ச்சிகளைக் கண்டது. இதன் பின்னரே நவீன விஞ்ஞானம் உதயமாயிற்று.


நவீன விஞ்ஞானம்.

மறுமலர்ச்சிக் காலத்தில் விஞ்ஞானம் படிப்படியாக முன்னேறத் தொடங்கியது. மத்தியகாலத்தில் கூடுதலாக அறியப்பட்டிருந்த ஆதாரமற்ற கருத்துக்களும், கோட்பாடுகளும் செல்வாக்கிழந்தது. நவீன விஞ்ஞானத்திற்குரிய புதிய கருத்துக்களும், அனுகுமுறைகளும் துளிர்விட்டன. கணிதம், வானவியல், வெப்பவியல், பௌதீகவியல் போன்ற துறைகளில் பல மாற்றங்களும் அபிவிருத்திகளும் உருவாகத் தொடங்கியது. கொப்பனிக்கஸ், தைகோடிபிறாகே, கெப்லர், கலிலியோ, நியூட்டன் ஆகியோர் இக்காலத்திற்குரிய முதன்மை விஞ்ஞானிகள் ஆவர். இந்த அடிப்படையில் கொப்பனிக்கஸின் கண்டுபிடிப்புக்களையும், கருத்துக்களையும் நோக்குவது அவசியமாகும்.

கொப்பனிக்கஸ் (1473 - 1543) போலாந்து நாட்டைச் சேர்ந்த தலைசிறந்த வானியல் அறிஞர். சட்டம், மருத்துவம், கிறிஸ்தவ சமய சட்டவியல், வானியல் ஆகிய துறைகளிலே தமது இளமைக் காலக் கல்வியைக் கற்றார். கொப்பனிக்கஸ், பூமியும் ஏனைய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன எனக்கூறிய கருத்தால் கவரப்பட்டு அதனைப்பற்றி பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகளையும், பரிசோதனைகளையும் அவதானிப்புக்களையும் மேற்கொண்டு தனது புகழ்பெற்ற நூலாகிய 'விண்மண்டலற் சுழற்சி' என்பதை எழுதினார். இதில் அவர் சூரியமையக் கொள்கையை விளக்கியதுடன் அதற்குரிய சான்றுகளையும் தெளிவாகக் காட்டியுள்ளார். சூரியனே நடு நிலையாகவும், பூமி என்பது ஒரு கோளாக அந்தச் சூரியனைச் சுற்றி ஓடி வருவதாகவும் உள்ள பிரபஞ்சம் ஒன்றின் பொதுத்தோற்றம் ஒன்றை கொப்பனிக்கஸ் கூறினார். பருவங்கள் ஏற்படக் காரணம் என்ன என்று விளக்கினார். இத்தாலி நாட்டிலிருந்து காண்போருக்கு வானில் நட்சத்திரங்கள் எந்ததெந்த இடங்களில் இருப்பவாக தோன்றுகின்றனவோ அதே இடங்களில் இருப்பவையாகவே எகிப்து நாட்டில் உள்ளவர்களுக்கு தோன்றுவதில்லை என்றார். பூமியின் தென்கோளத்தில் இருந்து காணக்கூடிய நட்சத்திரங்களை எல்லாம் அதன் வட கோளத்தில் இருந்து நம்மால் காணமுடியாது என்றார். கப்பலின் பாய்மரக் கூம்பின் உச்சியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்தால் அந்தக் கப்பல் கடலில் தொலைவில் செல்லச்செல்ல கரையில் இருந்து பார்ப்போருக்கு அது சிறிது சிறிதாக தாழ்ந்து வருவது போலத் தோன்றுகின்றது. கடைசியில் அந்த விளக்கு கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போகின்றது. நீருக்குள் அமிழ்ந்து போவது போலும் தோன்றுகின்றது. பூமி கோளவடிவானது என்று நிரூபிப்பதற்கு இந்த விளக்கங்களை எல்லாம் பயன்படுத்தினார்.

சூரியமைய கொள்கை
சூரியன் பிரபஞ்சத்தின் மத்தியில் உள்ளது. அதனைச் சுற்ற பூமியும் ஏனைய கோள்களும் இயங்குகின்றன. பூமி தன் அச்சில் சுற்றுகின்றது. சந்திரன் பூமியைச் சுற்றி அசைகின்றது. இவற்றில் அசைவு வட்டவடிவமானவை என்று எடுகோள்களின் அடிப்படையிலேயே கொப்பனிக்கஸ் தனது சூரியமையக் கருதுகோளை தனது நூலில் விளக்கியுள்ளார்.

இக்கொள்கையின் விளைவுகள் :
1. கோள்களில் இயக்கம் குறித்து சிறப்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சூரியமையக் கொள்கை வழி வகுத்தது.
2. தைகோடி பிறாகே தனது ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.
3. கெப்லர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது.
4. அரிஸ்டோடிலின் சூரியமையைக் கோட்பாடு பற்றி முதலில் கூறியபோதும் அவருடைய கருத்து வெறும் ஊகமாகவே இருந்தது. ஆனால் கொப்பனிக்கஸ் கணிதமுறையில் நிரூபனங்களைக் காட்டி ஓர் பயன் உள்ள கோட்பாடாக மாற்றி அமைத்தார்.
5. வானியல் எதிர்வு கூறல்களை மேற்கொள்ள உதவியது.
6. வானியல் உண்மைகளை இக்கோட்பாட்டைக் கொண்டு சரிபார்க்க முடிந்தது.
7. இக்கோட்பாட்டை புவிமையக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு அதை தவறு எனக் காட்ட முடிந்தது.




கொப்பனிக்கஸின் கோட்பாடு புரட்சி எனப்படுவதற்குரிய காரணங்கள் :
1. அண்டம் பற்றி இதுவரை இருந்த கருத்தோட்டங்கள் முழுவதையும் அடியோடு மாற்றி அமைத்தது.
2. உலகு பற்றியிருந்த தத்துவக் கண்ணோக்கினை மாற்றி அமைத்தது.
3. கிறிஸ்தவ மதபீடத்தினால் தனக்கு எதிர்ப்புக்கள் நிகழும் என்றபோதும் தனது கருத்துக்களை துணிந்து வெளியிட்டமை.
4. தனது கோட்பாடடை கணிதமுறை கணிப்புக்களுடன் ஒரு பயன் உள்ள அறிவியல் கோட்பாடாக வகுத்தமை.
5. கலிலியோ, கெப்லர் ஆகியோரின் பணிகளுக்கு முன்னுரையாக அமைந்தமை.
6. கொப்பனிக்கஸ் தனது நூலில் முன்னுரையில் கணிதக் கோட்பாடுகளை பயன்படுத்தி முடிவுகளைப் பெறும்போது இவ்வாறான விசித்திரமான முடிவுகளை பெறவேண்டி ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளமை.

குறைபாடு :
1. இவருடைய கோட்பாட்டால் கோள்களின் இயக்கம் வட்டவடிவமானது எனக் கூறியமையால் கணித முறைப்படி சிக்கலானதாகவும் யதார்த்தத்தன்மை குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
2. இவருக்குப்பின் எழுந்த வானியல் சிந்தனைகளின் படி இப்பிரபஞ்சத்தில் பல சூரிய மையங்கள் உண்டு என்ற கருத்து கூறப்பட்டுள்ளமை.
கலிலியோ, கெப்லர் போன்றோரின் பணிகளுக்கு கொப்பனிக்கசின் கொள்கை முன்னுரையாக அமைந்தது. வரலாற்று ரீதியில் நோக்குவோமாயின் கொப்பனிக்கசின் 'விண்மண்டலற் சுழற்சி' என்ற நூலே நவீன வானியல், ஏன் நவீன அறிவியலின் தோற்றுவாயாகவும் அமைந்தது என்பது மறுக்க முடியாது.

ஜொகன்னஸ் கெப்லர் 1571 இல் ஜேர்மனியில் பிறந்த இவர் கோள்களின் நீள்வளைய விதிகளைக் கண்டபிடித்த சிறந்த வானியலாளராகவும் கணித மேதையாகவும் விளங்குகின்றார். இவர் 1956 இல் வானியல் பற்றிய தனது முதல் நூலை எழுதினார். இந்நூலில் அவர் விளக்கிய கோட்பாடுகள் தவறாக அமைந்த போதும் அதில் அவர் கையாண்ட முறைகளைக் கருத்திற் கொண்ட தைக்கொடி பிறாகே தனது ஆய்வு கூடத்தில் வேலைசெய்ய வருமாறு கேட்டார். பிறாகேயின் மரணத்தின் பின் அவர் விட்டுச் சென்ற குறிப்புக்களைப் பயன்படுத்தி செவ்வாய்கிரகத்தைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். ஞாயிற்றுத் தொகுதியின் ஒழுங்கமைப்புப் பற்றிய ஆய்வுகளில் இவர் ஈடுபட்டார். இதற்கு முன்மாதிரியாக கணித அடிப்படையிலான ஞாயிற்றுத் தொகுதியின் மாதிரி உரு ஒன்றையும் இவர் அமைத்தார். (இதனை அமைக்கும் போது கெப்லர் அரிஸ்டோட்டிலின் கருத்துக்களால் கவரப்பட்டிருந்தார்) இதனால் இத்திட்டமும் தவறாகவே அமைந்தது.

கெப்லர் கோள்களின் நீள்வட்ட சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார். அதாவது கெப்லர் வாழ்ந்த காலத்தில் செய்வாய்க் கிரகத்தின் ஈர்ப்பு சக்தி தொடர்பாக பாரிய பிரச்சினை நிலவியது. 'தைக்கோடி பிறாகே' இந்த கடமையினை கெப்லருக்குச் சமர்ப்பித்தார். அவதானத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கெப்லர் செய்வாய்க் கிரகத்தினை அவதானிக்கக்கூடிய நான்கு இடங்களைத் தெரிவு செய்து அதன் ஈர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதைத் தேடிக்கொள்ள முற்பட்டார். இது தொடர்பான கணிப்பீட்டுக்காக 900 நாள்களை வீணாக்கியதுடன் ஏறத்தாழ 5 வருடங்கள் இதில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தின் முடிவில் பல தவறுகளை நிராகரித்து தற்செயலாக சரியான முடிவைப் பெற்றார். செவ்வாய்க்கிரகத்தின் சரியான ஒழுக்குப்பாதை சூரியனை மையமாகக் கொண்ட நீள்வட்ட வடிவம் என்பதை அவர் கண்டுகொண்டார். அதன் அடிப்படையில் கெப்லர் கோள்களின் இயக்கம் பற்றிய மூன்று விதிகளையும் முன்மொழிந்தார். அவை
1. நீள்வளைய விதி
ஒவ்வொரு கோளும் சூரியனை குவிவுமையமாகக் கொண்டு சூரியனைச்சுற்றி நீள்வட்டப்பாதையில் அசைகின்றன.
2. பரப்பு விதி
கோள்கள் சூரியனை அண்மிக்கும்போது கோள்களின் ஓட்டவேகம் அதிகரிக்கும். சூரியனில் இருந்து விலகிச் செல்லும்போது வேகம் குறையும்.
3. இசைவு விதி
ஒரு கோள் சூரியனைச் சுற்றி வர எடுக்கும் நேரமானது சூரியனுக்கும் அக்கோளுக்கும் இடைப்பட்ட தூரத்தில் தங்கியுள்ளது.

ஒளியியல் கோட்பாட்டிற்கும் கெப்லர் பல பணிகளைச் செய்ததாக கூறப்படுகின்றது. கொப்பனிக்கஸ், கலிலியோ போன்றோரால் கண்டுபிடிக்க முடியாத வானியல் சிக்கலுக்கு கெப்லரின் விதிகள் தீர்வுகண்டன. எனினும் கோள்கள் ஏன் நீள்வட்டப்பாதையில் இயக்குகின்றன என்பதற்கு இவர் விளக்கம் கூறவில்லை. இதே நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த நியூட்டன் இதற்கு விளக்கம் கூறியது குறிப்பிடத்தக்கதாகும்.

தைக்கொடி பிராகே (1546 - 1601) 1546 இல் டென்மார்க்கில் பிறந்த பிறாகே 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற வானியல் புரட்சியாளர்களில் முக்கிய இடத்தைப் பெறுகின்றார். தொலைநோக்கி கண்டு பிடிக்கப்படுதவற்கு முன்பிருந்த தலை சிறந்த வானியலாளர்களில் இறுதியானவராக விளங்கிய இவர் உலகம் கண்டிராத சிறந்த அவதானியாகவும், நுண் ஆய்வாளராகவும் திகழ்ந்தார்.

பிராகேயின் பணிகள் :
1. ஆயித்திற்கு மேற்பட்ட வானியல் அவதானங்களை மேற்கொண்டமை.
2. 1672 இல் மிநோவா நட்சத்திரத்தைக் கண்டுபிடித்தமை.
3. நட்சத்திர அட்டவணை ஒன்றை தயாரித்து வைத்திருந்தமை. (இவ் அட்டவணையைப் பயன்படுத்தியே கெப்லர் தனது நீள்வழைய விதிகளைக் கண்டுபிடித்தார்)
4. வால் வெள்ளிகள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டமை.
5. கோள்களின் இயக்கம் குறித்து தொலமியின் கொள்கை கொப்பனிக்லசின் கொள்கையுடன், கைகோடி பிரகேயும் மூன்றாவது ஒரு கொள்கையை வகுத்திருந்ததாக கூறப்படுகிறது.
6. பிறாகே கவின் தீவில், தான் அமைத்த ஆய்வுகூடத்தில் பயன்படுத்தப்படுவதற்காக பல கருவிகளை உருவாக்கியிருந்தார். இவை பிற்கால வானியல் ஆய்வுகளுக்கு உதவின எனக் கூறப்படுகின்றது.

பிரான்ஸிஸ் பேக்கன் (கி.பி. 1561 - 1626) பிரித்தானிய விஞ்ஞானியான இவர் விஞ்ஞான வளர்ச்சிக்கு பரிசோதனை அவசியமானது என வலியுறுத்தினார். இவர் விஞ்ஞான வளர்ச்சி மனித நன்மைக்கே பயன்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். கோட்பாட்டு அறிவும், தொழிநுட்ப அறிவும் இணைந்து செயற்படும்போது தான் விஞ்ஞானம் வளர்ச்சியடைய முடியும் என அறிமுகம் செய்யப்பட்டது. இவருடைய கருத்துக்கள் பெரும்பாலும் இயற்கையோடும், அனுபவத்தோடுமே இருந்தது.


கலிலியோ (கி.பி. 1564 - 1642)
1564 இல் பீசா நகரில் பிறந்த இவர் தலைசிறந்த விஞ்ஞானியாவார். இவர் மற்றைய விஞ்ஞானிகளை விட சிறந்த விஞ்ஞான முறைகளைக் கண்டு பிடித்தமையால் உலகப் புகழ்பெற்றுள்ளர். கலிலியோ விஞ்ஞானப் பணிகளில் சடத்துவ விதி, தொலைநோக்கி கண்டு பிடிப்பு, வானியல் ஆய்வுகள், கொப்பனிக்கஸின் கோட்பாட்டை மெய்பித்தமை போன்றவை முக்கியமானவை. இவற்றைவிட இவர் விஞ்ஞான முறையியலை உருவாக்குவதற்குச் செய்த பணிகளே பெரும் புகழை ஈட்டித்தந்தது.

பௌதீகபணி :
இவர் மருத்துவ மாணவராக இருந்தபோது (17 வயதில்) ஒரு நாள் தேவாலயத்தில் உள்ள மெழுகுவர்த்தி தாங்கி, ஒரு சங்கிலியில் தொங்கவிடப்பட்டு அச்சங்கிலி ஆடுவதை அவதானித்தார். அச் சங்கிலியின் இருபக்க அசைவுகளும் சமமாக இருப்பதை அவதனரித்தார். கைக்கடிகாரம் அப்போது இல்லாததால் இதயத்துடிப்பு அடிப்படையாக் கொண்டு அவ் அசைவை எண்ணிப்பார்க்கும் போது பெரிய அசைவோ, சிறிய அசைவோ சம அளவு நேரம் அசைய எடுத்ததை அவதானித்தார். இதனடிப்படையில்.
1. Pரடளந ஆநவநச (ஊசல்மாணி) யைத் தயாரித்தர்.
2. பின்னர் இதனடிப்படையில் இவரது மகன் ஏiளெநதெi (வின்சென்ஜி) சுவர்க்கடிகாரம் தயாரித்தார்;. இதுவே இன்றைய பென்டூலம் மணிக்கூடாக அபிவிருத்தியடைந்துள்ளது.
3. கலிலியோ தனது 22வது வயதில் ஆக்கிமிடிஸின் கொள்கையை பயன்படுத்தி பொருட்களின் அடர்த்தியைக் கணிப்பிதற்காக நீர்மட்டத் தராசைக் கண்டுபிடித்தார்.
4. பீசா பல்கலைக்கழத்தில் கணிதப் பேராசியர் பதவியை ஏற்றபின் (இருபத்தைந்து வயதில்) பாரம் குறைந்த பொருட்களைவிட பாரம் கூடிய பொருட்களே முதலில் விழும் என்ற அரிஸ்டோட்லின் கருத்தினை பல தொடர்ச்சியான பரிசோதனைகள் மூலம் பொய்யெனக் காட்டி 'பாரம் குறைந்த பொருட்களும் பாரம் கூடிய பொருட்களும் தடைத்தாக்கம் இல்லாவிட்டால் ஒரே நேரத்தில் விழும்' என்ற உண்மையை நிலை நாட்டினார். இந்த உண்மையினை நிலைநாட்டுவதற்காக தீர்ப்பு சோதனை செய்யப்பட்டது.

180 அடிகொண்ட பீசா கோபுரத்தின் 7 வது மாடியில் 100 இறாத்தல், 1 இறாத்தல் (Pழரனெ) கொண்ட இரு இரும்பு உருண்டைகளை (பந்து) போட்டவுடன் இரண்டுமே ஒரே நேத்தில் பூமியைச் தொட்டது. இயங்கும் பொருள் ஒன்றின் வேகம் படிப்படியாக குறைந்து கொண்டே செல்லும். இதனை வேறோர் விசையினால் முடிக்கிவிடாவிடின் அதன் இயக்கம் நின்றுவிடும் என நீண்ட காலமாக மக்கள் நம்பினால் இது தவறானது எனப்தை கலிலியோ பல பரிசோதனைகள் மூலம் நிரூபித்தார். உராய்தல் போன்ற வேதக்தைக் குறைக்கும் விசைகளை அடியோடு நீக்குவோமாயின் ஒரு பொருள் இடைவிடாது தொடர்ந்து இயக்கிக் கொண்ட இருக்கும். (இதனை நியூட்டனின் தனது முதலாவது விதியாக வகுத்தமைத்தார்). கலிலியோ ஒளியின் (டுiபாவ) வேகத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கும் வழிகோலினார்.

வானியல் பணிகள்
1. 17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குழப்பத்திலிருந்த வானியல் கோட்பாட்டை தெளிவாக்கினார். (1404 இல் கொப்பனிக்கஸின் கருத்தை சரியானதென நிரூபிக் காட்டினார்).
2. தொலைநோக்கி கண்டுபிடிப்பு:
லிப்பர்ஷி (டுippநசளால) என்ற ஒல்லாந்து மூக்குக் கண்ணாடித் தயாரிப்பாளர் இரண்டு வில்லைகளை சமவளவு தூரத்தில் வைத்து நோக்கி அவ்வில்லைகளுக்கு அப்பால் வைக்கப்படும் பொருள் பெரிதாகத் தோன்றும் என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இவ்வுண்மையை ஆதாரமாகக் கொண்டு கலிலியோ தொலைநோக்கியைக் கண்டுபிடித்தார். கலிலியோ முதலில் தயாரித்த தொலைக்காட்டி பொருட்களை மும்மடங்கு பெருப்பித்துக் காட்டியதுடன் அதன் உண்மையான தூரத்தில் மூன்றில் ஒரு பங்காக அண்மையில் சுருக்கியும் காட்டியது. எண்மடங்கு பெருப்பித்துக் காட்டும் தொலைகாட்டியைக் கண்டுபிடித்தார். இக்கருவியில் திருப்தியடையாத கலிலியோ முப்பது மடங்கு பெருப்பித்துக் காட்டக்கூடிய தொலைக்காட்டியொன்றை வடிவமைத்தார்.

இக்கருவியைச் பயன்;படுத்திப் பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தார்.
1. ஆறு தாரைகள் என வர்ணிக்கப்படும் உடுத்தொகுதியைப் பார்த்து 36 உடுக்களை அவதானித்தார்.
2. பால்வீதி (ஆடைமறயல) யைக் கண்டுபிடித்தார்.
3. இக்கருவியினூடாக சந்திரனின் மேற்பரப்பை அவதானித்து அங்கு பெரும் மலைத்தொடர்களும், பள்ளங்களும் பரந்தர சமவெளிகளும் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.
4. 1610 இல் தனது கருவியை வியாழன் நோக்கித் திருப்பி அதற்கு அண்மையில் நான்கு சந்திரன்கள் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.
5. இத்துணைக்கோள்களில் ஒன்று வியாழனைச் சுற்றிவர நாற்பத்திரண்டு மணித்தியாலமும், ஏனையவை மூன்றும் பதினேழு நாட்கள் எடுக்கும் என்பதையும் கணித்துக் கூறினார்.
6. சூரியனை நோக்கி, அதில் சூரிய களங்கள் (ளுரnளிழமள) இருப்பதைக் கண்டறிந்தார்.
7. சந்திரனைப் போலவே சுக்கிரனுக்கும் வளர்ச்சியும் தேய்வும் உண்டு என்பதை அவதானித்து வெளிப்படுத்தினார்.
8. கலிலியோ அவதானித்த வெள்ளிக்கிரகம், செவ்வாய்கிரகம் போன்ற இரு கோள்கள் வௌ;வேறு காலங்களில் பருமனில் மாற்றம் அடைந்தமை தெரிந்தது.

கலிலியோ விண்ணில் உள்ள பொருட்களைப் பற்றி இயற்கையான அவதானிப்புக்களில் ஈடுபட்டார். இந்த இயற்கையான அவதானிப்பை மேற்கொள்வதற்கு தொலைநோக்கி என்ற கருவியைப் பயன்படுத்தினார். இந்த தொலைநோக்கியைக் கொண்டு வௌ;வேறு நாட்களில் அவர் பல அவதானிப்பை மேற்கொண்டார். இந்த அவதானத்தில் வெள்ளி என்ற கோள் வடிவத்தில் மாற்றம் அடைந்தமை தெரியவந்தது. இந்த முடிவைப் பெறுவதற்கு அவர் பலதடவை அவதானங்களை மேற்கொண்டதன் மூலம் பெறப்பட்டதாகும். இந்த முடிவு எல்லாவற்றையும் கலிலியா பதிவு செய்து கொண்டார்.

டேக்காட் (கி.பி. 1596 - 1650) என்பவர் சடப்பொருட்களையும் அசைவையும் கொண்டு எல்லா நிகழ்வுகளையும் விளக்க முற்பட்டார். டேக்காட் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற மெய்யியலாளரும், கணித மேதையும், உளவியலாளராகவும் உள்ளார்.

டேக்காட்டின் சிந்தனைகளில் பின்வருவன ஐரோப்பிய சிந்தனைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

1. உலகு பற்றிய அவரது ஏந்திரவியல் நோக்கு.
2. விஞ்ஞான ஆராய்ச்சிகள் குறித்து அவரது முறையியல் நோக்கு.
3. விஞ்ஞானத்தில் கணிதத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம்.
4. எந்த ஒரு ஆய்வும் ஐயத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என வலியுறுத்தியமை.

1630 தொடக்கம் 1634 வரையுள்ள காலப்பகுதியில் டேக்காட்டின் விஞ்ஞான ஆய்வுகள் இடம்பெற்றன. உடல் கூற்றியல், உடலியல், ஒளியியல், வானியல், கணிதம் போன்ற பல ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் தனது விஞ்ஞான ஆய்வு முடிவுகள் வெளியிடுவதற்காக எழுதிய நூல் 'உலகம்' (டுநஅழனெந) என்பதாகும். ஆனால் இந்நூல் வெளிவரவில்லை. 1637 இல் விஞ்ஞானத்தில் பகுத்தறிவைப் பயன்படுத்தி உண்மைகளை அறியும்முறை (முறைகள் பற்றிய ஆய்வு என்ற நூலை வெளியிட்டார்) இதில் அவர் மூன்று பின்னினைப்புக்களைச் சேர்ந்துள்ளார்.

ஒளியியல் பற்றியது.
1. ஒளிவிலகல் விதி பற்றி கூறியிருந்தார்.
2. ஆடிகள், வேறுபல ஒளியியல் கருவிகள், பற்றிக் கூறியுள்ளமை.
3. கண்ணின் செயல்முறையும் அதன் முறையாற்ற செல்முறையும் பற்றி விளக்கியமை.
4. ஒளியின் அலைக் கொள்கையின் முன்னோடி.

வானியல் பற்றியது.
1. மேகங்கள் , காற்று, மழை போன்றவற்றை ஆய்வு செய்தமை.
2. வானவில் உண்டாவதற்கான சரியான விளக்கத்தை முன்வைத்தமை.
3. வெப்பம் என்பது உள் அமுக்க இயக்கம் எனக்கூறியமை.

வடிவக் கணிதம் பற்றியது (புநழஅநவசல)
1. பகுப்பாய்வுக் கணிதத்தைக் கண்டுபிடித்தமை. இதிலிருந்துதான் நியூட்டன், கல்குலஸ் (புயடஉரடரள) என்ற கணித முறையைக் கண்டுபிடித்தார்.

முறைகள் பற்றிய இவரது கருத்துக்கள்
1. எந்தவொரு ஆய்வை மேற்கொள்பவரும் முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
2. ஐயுறுகின்ற முறையில் இருந்தே டேகாட் தனது ஆய்வுகளை தொடங்கினார். (இறையிருப்பை இவ்வாறே நிறுவினார்)
3. நோக்கவியல் திட்ட முறையை இவர் எதிர்த்தார்.

டேகாட்டின் உடல் மணம் பற்றிய இருமைக் கொள்கை
டேகாட் என்பவரால் உடல், மணம், பற்றி முன்வைக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை அவருடய இருமைக் கோட்பாடு என அழைக்கப்படுகிது.
இக்கோட்பாட்டின் படி மனிதன் உடல், மணம் என்ற இரு திரவியங்களால் ஆக்கப்பட்டுள்ளான் எனக் கூறுகின்றார்.
உடல் நிகழ்ச்சிகள் மனத்தயும், மனநிகழ்ச்சிகள் உடலையும் தாக்குவதை அனுபவத்தில் அதவதானித்த டேக்காட், கலிலியோ, நியூட்டன் போன்றோர் சடப்பொருட்களில் இயக்கம் தொடர்பாக சில விதிகளை வகுத்தது போன்று உடல்மன நிகழ்வுகளுக்கும் விதிகள் இருக்க வேண்டும் எனக்கருதி தனது கோட்பாடடை முன்வைத்தார்.
டேக்காட்டின் கோட்பாடு பிற்காலத்தில் பல விமர்சனங்களுக்கு உடப்டுத்தப்பட்டுள்ளழது. கில்பெட் றையில் என்ற மன மெய்யியலாளர்.

இக்கோட்பாடு பற்றிக் கூறும்போது டேக்காட் மனிதனைப்பற்றி தவறாக விளங்கியமையாலேயே இவ்வாறான ஒரு கோட்பாட்டை வெளியிட்டர் எனவும் இது உண்மையில் ஒருவகைக் குளறுபடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உலகு பற்றி டேக்காட்டின் ஏந்திரவியல் நோக்கு
இறைவன் மனித ஆன்மா நீங்கலாக உலகம் முழுவதும் ஏந்திரவியல் இயங்கி வருகிறது. எனவே இயற்கை நிகழ்வுகள் அனைத்தையும் ஏந்திரவியல் காரணங்களால் விளக்க முடியும் என இவர் கூறுகின்றார்.
ஏந்திரவியல் விளக்கம் காரணமாக இவர் சோதிடம், மந்திரம் போன்ற மூட நம்பிக்கைகளை எதிர்த்தார்.
இயற்கை நிகழ்சிகளின் காரணகாரிய தொடர்புகள்  தற்செயல் நிகழ்வுகள் அல்ல, இறுதி விளைவு நோக்கிய ஒரு மூலத்திட்டத்தின் பிரிவுகளே என்று கூறும் நோக்கவியல் திட்ட வாத்தை (வுநடநடழபiஉயட) இவர் கடுமையாக எதிர்த்தார்.
இவ் விளக்கத்தின்படி விலங்குகள் கூட சிக்கலான ஏந்திரவியல் அமைப்பைப் பெற்றுள்ளன எனவும் மனித உடலும் ஏந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டது எனவும் கூறுகின்றார். இக்கருத்து பிற்காலத்தில் நவீன உடலியல் வளர்ச்சிக்கு உதவியது.

சேர் ஐசாக் நியூட்டன் (கி.பி. 1642 - 1727) 1642 இல் இங்கிலாந்தில் உள்ள வூல்த் தோப்பில் பிறந்த நியூட்டன் கணிதம், பௌதீகம் வானியல் போன்ற துறைகளில் பல அரிய கண்டுபிடிப்புக்களை நிகழ்த்தி அத்துறைகளின் வளர்ச்சிகளுக்கு உதவியதுடன் தற்கால விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும் வழி கோலினார்.
நியூட்டனுக்கு முன்னர் விஞ்ஞானத்தில் சரியான விஞ்ஞான விதிமுறைகள் உருவாக்கப்படவில்லை. இவரே ஒருங்கினைந்த விதிமுறைகளை உருவாக்கி நவீன விஞ்ஞனத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தவர் ஆவார்.
நியூட்டன் தனது கோட்பாடுகளில் பெரும்பாலானவற்றை 1699 இல் வகுத்தமைத்த போதும் அவற்றை வெளியிடுவதில் தயக்கம் காட்டியதால், பல ஆண்டுகளுக்குப் பின்னரே அவை வெளியிடப்பட்டன.
12 வயதிலேயே பாடாசலைக்குச் சென்றார். ஓவியம் வரைதலிலும் ஆநஉhயniஉயட துறையிலும் இவருக்கு நாட்டம் இருந்தது.
இதனால் 19 வயதில் வுசinவைல ஊழடடநபந ஊயnடிசனைபந ல் கல்வி கற்றார் 1665 இல் இங்கேயே பட்டம் பெற்றார்.
1665 இல் றுழழடன வுhழசிந (வூல்ஸ் தோப்) எனும் தனது சொந்தக் கிராமத்துக்கு விடுமுறையைக் கழிக்க வந்த நியூட்டன், அப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்திருந்தபோது அப்பிள் ஒன்று மரத்திலிருந்து பூமியை நோக்கி விழுந்ததை அவதானித்த அவர் வலதுபக்கமோ மேல்நோக்கியோ இவ் அப்பிள் செல்லாமல் பூமியை நோக்கி விழுவதற்கான காரணம் என்ன என்பது பற்றி யோசித்தார். இவ்வாறே எல்லாப் பொருட்களுமே பூமியை நோக்கி விழுவதனால் ஏதோ ஒரு சக்தி பூமியை நோக்கி விழச் செய்கிறது என்ற முடிவுக்கு வந்தார். இதனை அடிப்படையாக வைத்து புவியூர்ப்பு விசை சம்பந்தமான விசையை உலகிற்கு தருவித்தார்.

நியூட்டனின் பௌதீகவியல் பணிகள்
ஒளியியல் செய்தவை :
1. ஒளியின் இயல்பு பற்றிய புரட்சி நூலே இவரது முதலாவது கண்டு பிடிப்பாகும்.
2. சூரியனில் இருந்துவரும் வெள்ளாளியானது வானவில்லின் நிறங்கள் (ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சல், செம்மஞ்சள், சிவப்பு, நீலம்) அனைத்தையும் உள்ளடக்கிய கலவை என்பதை அரியம் என்ற கருவியினூடாக பல நுட்பமான பரிசோதனைகள் மூலம் கண்டு பிடித்தார்.
3. இவ் ஆய்வினூடாக ஒளித்தெறிப்பு, ஒளிமுறிவு விதிகளையும் நியூட்டன் கண்டுபிடித்தார்.
4. ஒளித்தொகுப்பு, முறிவு விதிகளைப் பயன்படுத்தி 1668 இல் முதன்முதல் பிரதிபலிப்புத் தொலைக்காட்டியை (சுநகடநஉவiபெ வுநடநளஉழிந) வடிவமைத்துத் தயாரித்தார்.
5. நியூட்டன் தனது ஒளிபற்றி செய்த ஆய்வுகளை 'ஒளிச்சிதறல்கள்' என்ற தலைப்பில் கட்டுரையாக எழுதி றோயல் சங்கத்தில் வாசித்தன் மூலம் உலகறியச் செய்தார். (29 வயதில்)

இயக்கவியலில் செய்தவை :
பருப்பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விளக்கும் அறிவியல் துறையே இயக்கவியல் எனப்படும்.
1) முதலாம் விதி : யாதேனுமொரு பொருளின் மீது சம அளவான விசை ஒன்று பிரயோகிக்கப்பாவிடின் அப்பொருள் ஓய்வில் இருக்கும் அல்லது சீரானா வேகத்தில் நேர்கோட்டில் அசைந்தபடி இருக்கும். (இவ்விதி ஏற்கனவே கலிலியோவால் கண்டுபிடிக்கப்பட்டது.)
2) இரண்டாம் விதி : ஒரு பொருளின் திணிவினதும் ஆர்முடுகலினதும் பெருக்கம் அப் பொருளின் மீது பிரயோகிக்கப்படும் சம அளவான விசைக்கு நேர்விகிதசமனாகும். ஆர்முடுகலின் திசை விசையின் திசையேயாகும்.
3) மூன்றாம் விதி : எல்லாத் தாக்கங்களும் அதற்குச் சமனானதும் எதிர்த்திசையிலானதுமான மறுதாக்கம் உண்டு.

ஈர்ப்பு விசை
பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை அவற்றின் திணிவின் பெருக்கத்திற்கு நேர்விகிதமாகவும் தூரத்தின் வர்க்கத்திற்கு நேர்மாறு விகிதத் தொடர்பையும் கொண்டுள்ளது என வரையறை செய்யப்படும்.
1. ஈர்ப்புக் கொள்கையின் அடிப்படையிலேயே இயக்கவியல், நிலையியல் என்ற பௌதீகத்துறைகள் தோற்றம் பெற்றன.
2. இவ் ஆய்வுகளின் மூலமே சூரியகோளத்தின் திணிவை முதன் முதலாக கணக்கிட்டார். (திணிவு சுமாரா 2 ஒ 10 தொன்)
3. இவ் ஆய்வுகளிலிருந்து வெளி, காலம், திணிவு என்பவை தனித்துவம் உடையவையும் மாறாதவையுமாகும் எனக் கூறியுள்ளார் இக்கருத்தை அல்பேட் ஜன்ஸ்ரைன் தனது சார்புக் கோட்பாட்டில் மறுத்துள்ளார்.

நியூட்டனுடைய இந்த நான்கு விதிகளையும் ஓர் ஊசலின் அசைவிலிருந்து சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் கோள்களின் இயக்கம் வரை உள்ள, எமது அவதானத்திற்கு உட்படும் இயற்கையின் இயக்கங்களையும் நடத்தைகளையும் எதிர்வுகூற முடியும். இவ் விதிகளைக் கொண்டு விஞ்ஞான பொறியியல் சிக்கல்களுக்கு தீர்வுகாண முடியும். இவ்விதிகளும் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட பிரதிபலிப்புத் தொலைக்காட்டியும் வானியல் கண்டுபிடிப்பிற்கும் அதன் வளர்ச்சிக்கும் உதவின. இவர் கோள்களின் சுழற்சிக்கான காரணங்களையும் ஆராய்ந்து விளக்கியுள்ளார்.

அரிஸ்டோட்டில் தனது கருத்தில் விண்கோள் எனும் கோள்களினால் தொடர்புபட்ட ஓர் உலகையே முன்வைத்திருந்தார். இந்தக் கோள்களில் எல்லா இடங்களிலும் வஸ்துக்களினால் நிரப்பப்பட்டிருக்கும் என்றார். ஆனால் நியூட்டன் இக்கருத்தை ஏற்கவில்லை. இவர் டேக்காட்டின் பொறிமுறையியல் சார்ந்த கருத்தை (உலகு பற்றிய) ஏற்றிருந்ததினால் அவர், உலகம் ஒன்றின் மீது ஒன்று தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற அசையும் வஸ்துக்களினால் உருவாக்கப்பட்டுள்ளது எனக் கருத்துரைத்தார்.

கணிதத்துறையில் செய்தவை:-
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் கல்விகற்ற போது டேக்காட்டின் வடிவக் கணிதத் துறையால் கவரப்பட்டு அதனைக்கற்று பல புதிய கண்டுபிடிப்புக்களை மேற்கொண்டார்.
1. 1665 இல் கணித உலகின் முக்கியமாகக் கருதப்பட்ட பைனாமியல் தேற்றத்தைக் (டீழைழெஅயைட வுhநழசநஅ) கண்டுபிடித்தமை.
2. தொகையீட்டு நுண்கணிதத்தைக் (ஐவெநபசயட ஊயடஉடைரள) கண்டுபிடித்தமை. கணித உலகிற்கு இவர் செய்த மாபெரும் பணியாகும் எனக் கூறப்படுகின்றது. இக்கண்டுபிடிப்பு நவீன விஞ்ஞானத்தின் கோட்பாடுகளில் பெரும் பகுதி தோற்றுவதற்கு வழிவகுத்தது,
இவருடைய கணிதப்பணியைப் பற்றிக் கூறும் போது 'உலகின் தொடக்கத்தில் இருந்து நியூட்டன் வாழ்ந்த காலம்வரை கணிதத்துறையை நோக்குமிடத்து நியூற்றன் ஆற்றிய பணிகளே அதிகமாக உள்ளன' என லைப்பினிஸ்ட் என்ற அறிஞர் கூறியுள்ளார்.

வானியலில் செய்தவை
1. விண்மீன்களின் தோற்றம்பற்றி முதன்முதல் நம்பகமான விளக்கங்களை வெளியிட்டமை.
2. கோள்கள் சூரியனைச் சுற்றி நீள்வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணங்களையும் கூறியமை.
3. விண்மீன்கள், கோள்கள், ஆகியவற்றின் நிலைகளையும், இயக்கங்களையும் பற்றி ஊகித்தறியும்; சிக்கல்களை இவருடைய ஆய்வுகள் தீர்த்து வைத்தமையால் நியூட்டன் வானியல் அறிஞர்களில் தலைசிறந்தவராக கருதப்படுகின்றார்.

1987 இல் இயற்கைத் தத்துவத்தின் கணித விதிகள் என்ற தலைசிறந்த நூலை வெளியிட்டமை. இந்நூலில் தனது இயக்கவிதிகள் மூன்றையும் ஈர்ப்புக் கொள்கையையும் விரிவாக விளக்கியுள்ளார். கோள்களின் இயக்கங்களை எதிர்வு கூறுவதற்கு இவ்விதிகள் எவ்வாறு உதவுகின்றன என்பதை விளக்கியுள்ளார். எனவே நியூட்டனின் கண்டுடிபிடிப்புக்களும், விதிகளும் விஞ்ஞானத்தில் மிகவும் பெரிய பாதிப்புக்களையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தியது எனலாம்.
18ம் நூற்றாண்டு காலப்பகுதியில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் நேரடியாகத் கைத்தொழிற்புரட்சியைத் தோற்றுவிக்கவில்லை. ஆனால் அக்காலத்தில் கைத்தொழில்களில் இருந்த பிரச்சினைகளே விஞ்ஞான ஆய்வுகளை மேலும் ஊக்குவித்தன. இதன் விளைவாக நீராவியினைப் பயன்படுத்தி இயங்கும் இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. துணி நெய்யும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை யாவும் மக்கள் வாழ்க்கையில் பல மாறுதல்களை ஏற்படுத்தின. நீராவியின் சக்தியைக் கண்டுபிடிப்பாளர்கள் 1807 இல் நீராவியால் இயங்கும் கப்பல்கள் இயங்கத் தொடங்கின. 1830 இல் ஜோர்ஜ் ஸ்ரீபன் மணிக்கு 56.7 கி.மீற்றர் ஓடக்கூடிய இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். தோம்ஸ்ன் நீராவியினால் வீடுகளுக்கு வெப்பமூட்டினார். புகையில்லா அடுப்பை அமைத்தார். நீர்வீழ்ச்சியில் சக்கரத்தை வைத்து இயக்குவதால் வெப்ப ஆற்றலும் ஒளி ஆற்றலும் பெறப்படும் என்பது அறியப்பட்டது. 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மின்சாரம் ஒரு புதுமைப் பொருளாகவே இருந்தது.

பென்சமின் பிராங்கிளின் மின்சாரத்தைப் பற்றி பல ஆய்வுகளைச் செய்தார். வோல்டர் என்பவர் மின் கலத்தைக் கண்டுபிடித்தார். 19ம் நூற்றாண்டு மின்சார காலம் என்றே அழைக்கப்படுகிறது. இக்காலத்தில் டேவி, மைக்கல் பரடே, ஜோசப் ஹென்றி போன்றோரின் ஆய்வுகள் முக்கியம் பெற்றன.

ஹம்பிறி டேவி (1778 - 1829)
இவர் ஆங்கிலேயே தேச பௌதீகவியலறிஞரும், இரசாயனவியலறிஞரும் ஆவார்.
சுரங்கத் தொழிலாளர்களுக்கான காபல் விளக்கை (ளுயகவல டுயஅp) கண்டுபிடித்தவர்.
மிகப் பிரகாசமான ஒளியைத் தரக்கூடிய மின்வில் (நுடநஉவசiஉ யுசஉ) என்பதைக் கண்டுபிடித்தவர்.
பொட்டாசியம் (மு) சோடியம், (யே), கல்சியம் (ஊய), பேரியம் (டீய), மக்னீசியம் (ஆப), போரான் (டீ), ஸ்ரோன்டியம் (ளுச) எனும் மூலகங்களைக் கண்டுபிடித்தவர்.
சிரிப்பு வாயு எனப்படும் நைதரஸ் ஒட்சைட்டை (Nவைசழரள ழுஒனைந) கண்டு பிடித்தவர்.
மின்னோட்டத்தை நீரினுட் செலுத்தி ஒரு கூட்டுப்பொருளை பல தனிப் பொருட்களாகப் பிரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர்.

மைக்கல் பரடே (1761 - 1867)
டேவியின் பணிப்பாளராக இருந்த இவர் றோயல் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றபின் மின்சாரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவ் ஆய்வுகளின் விளைவாக
1. பொட்டாசியத்தைக் கண்டுபிடித்தார்.
2. காந்தத்தைக் கொண்டு மின்சாரத்தைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் 1931ம் ஆண்டின் டைனமோ கண்டு பிடிக்கப்பட்டது.
3. மின்சார சக்தியை இரசாயனப் பொருட்களில் கரைத்து நீரில் செலுத்தும் போது ஏற்படும் மாற்றங்கள் மூலம் தங்க முலாம், வெள்ளி முலாம் பூசும் முறையைக் கண்டுபிடித்தார்.
4. மின்தாங்கியின் ஏற்புத்திறனை அளக்கும் அலகு 'மைக்கிரோ பராட்' என பரடேயின் பெயர் கொண்டே அழைக்கப்படுகின்றது.
5. மின்காந்தத் தூண்டலின் தந்தையாவார்.
6. 1852 இல் டீநணெநநெ (வென்ஸீன்) கண்டுபிடிப்பில் இவரது வேலை பிரதிபலீத்தது.
7. 1823 ஆம் ஆண்டில் வாயுவை அமுக்கத்தின் மூலம் திரவமாக்கலாம் என கண்டு பிடித்தார்.
8. இவரது மின்காந்தத் தூண்டல் தத்துவத்தினூடாகவே புநநெசயவழசஇ வுசயளெ கழசஅநச செயற்படுகிறது.

ஜேம்ஸ் கிளாக் மெக்ஸ்வெல் (1831 - 1879)
1. காந்த ஈர்ப்பைக் கண்டுபிடித்தவர்.
2. ஒளி மின்காந்த இயல்புடையது என்ற கருத்தை முன்வைத்தார்.
3. மின்காந்தக் கதிர்ப்புக் கோட்பாடு (வுhநழசல ழக நுடநஉவசழஅயபநெவiஉ) உருப்பெற வித்திட்டவர். மின்காந்தவியல் தொடர்பான சமன்பாடு ஒன்றையும் உருவாக்கியவர். இவ்வாறாக மின்காந்தவியல் துறையின் வளர்ச்சிக்கு உதவினார்.
4. மின்சாரத்தின் இயக்கம் (நுடநஉவசiஉவைல in ஆழவழைn) வாயுக்களின் இயக்கப்பண்புக் கொள்கை (வுhந முiநெவiஉ வுhநழசல ழக புயளநள) என்பன தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் பிரபலமானவர்.

டால்ரன், மென்டலீவ் ஆகியோரின் அணு ஆய்வுகள் புதிய பௌதீக, இரசாயன கோட்பாடுகள் தோன்றுவதற்கு உதவின.

ஜோன் டோல்ரன் (1766 - 1844) அணுபற்றி முதன் முதலி;ல் விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்து அணுக்கொள்கையினை 1808 ஆம் ஆண்டு முன்வைத்தார். இக்கொள்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள்.
1. சடப்பொருட்கள் யாவும் அணுக்களால் ஆனவை. இவற்றிற்கு இடத்தைப் பிடித்துக் கொள்ளும் தன்மையுண்டு.
2. ஒரே மூலகத்தின் அணுக்கள் யாவும் ஒரே இயல்பைக் கொண்டிக்கும்.
3. அணுவை ஆக்கவோ அன்றேல் அழிக்கவோ முடியாது.
4. அணுவை பிரிக்க முடியாது.

இவர் மூலகங்களின் அணு நிறையைச் சரியாகக் கணித்தார். காற்றின் அழுத்தத்தினை அதிகரிக்கச் செய்யும் போது அதன் வெப்பநிலை எந்த அளவில் அதிகமாகிறது என்பதை விளக்கும் சூத்திரத்தைக் கண்டு பிடித்தார். அழுத்தம் அதிகரிக்கும் போதும் வெப்பம் குறையும் போதும் எல்லா வாயுக்களும் திரவங்களாக மாறிவிடுகின்றன என்பதையும் ஆராய்ச்சிகள் மூலம் நிரூபித்தார்.

1990 இல் மாக்ஸ் பிளாங்க் (1857 - 1947) 'குவாண்டம் கொள்கை' யும் 1905 இல் அல்பேட் ஐன் ஸ்ரைனின் 'சார்புக் கொள்கை' யும் விஞ்ஞானத்தில் பல புதிய மாறுதல்களை ஏற்படுத்தின. மேலே கூறப்பட்ட இரு கொள்கைகளும் உலகு பற்றிய பழைய பௌதீகவியற் கொள்கைகளைக் கைவிடும்படி கூறுகின்றன.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 'கைசன் பேக்கின்' (1901 - 1976) 'நிர்ணயமின்மைத் தத்துவம்' இக்கால விஞ்ஞானத்தில் மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியது எனலாம்.

பௌதீக, இரசாயனம் போன்ற துறைகளுடன் ஒப்பிடும் போது உயிரியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பின்தங்கியதாகவே இருந்தது. எனினும் 18ம் நூற்றாண்டில் சுவீடனைச் சேர்ந்த கார்ள்வொன் லினேயஸ் என்பவர் உயிரினங்களைத் தர்க்கரீதியில் பாகுபாடு செய்தார். இதன் பின் 'லாமார்க்' என்பவர் கூர்ப்புப்பற்றிய கருத்தை வெளியிட்டார். 'சார்ள்ஸ் டார்வின்' என்பவர் 1859 இல் இனங்களின் தோற்றம்' என்ற நூலையும் 1871 இல் மனிதனின் பாரம்பரியம், பால், வேறுபாடு பற்றிய 'இயற்கையின் இயல்தேர்வு முறை' என்ற நூலையும் வெளியிட்டார். இவை உயிரியல் துறையில் மட்டுமின்றி சமூக விஞ்ஞானத் துறைகளிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தின.

சார்ள்ஸ் டார்வின் (1809 - 1882) கூர்ப்பு பற்றிய நவீன தத்துவத்தை அடித்தலமிட்ட நவீன விஞ்ஞானி.  இவரது காலத்திற்கு முன் ஒவ்வொரு உயிரும் தனித்தனியாக உலகில் தோன்றியது என நம்பப்பட்டது. எந்த உயிரிலும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை என நம்பப்பட்டது. இவர் ஆராய்ச்சிகளின் மூலம் கூர்ப்பு இயற்கைச் சட்டம் என்றும் உலகிலுள்ள அனைத்து உயிரும் ஒரு பொதுவான மூதாதையிலிருந்து தோன்றியது என்றும் கூறினார். வைத்தியத்துறையில் அவர் கற்றிருந்தும் அக்காலத்தைய அறுவைச்சிகிச்சை முறை அதிருப்தியை ஏற்படுத்தியமையால் வைத்தியத்துறையை விட்டு நீங்கினார். இவர் ஒரு இயற்கைவாதியாக இருந்ததனால் 5 வருடங்களாக உலகைச் சுற்றும் விஞ்ஞான சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இப்பயணத்தின் போது, பல விலங்குகளின் எலும்புகளை சேகரித்துக் கொண்டார். பல தீவுகளில் பலவகையாகச் சேர்க்கப்பட்ட இவ் எலும்புகளே இவரது கூர்ப்பு பற்றிய கொள்கையை வெளியிட உதவியது. பின்னர் இவரைப் போன்று கூர்ப்பு பற்றி ஆராய்ச்சி செய்த அல்பேர்ட் ரஸல் வலஸ் (யுடடிநசவ சுரளளநடட றுயடயஉந) என்பவருடன் இணைந்து 1858 இல் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை வெளியிட்டார். 1859 இல் தனது கூர்ப்பு பற்றிய கொள்கையில் புகழ்பெற்ற புத்தகமான 'இயற்கைத் தெரிவின் இனங்களின் தோற்றம்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு பொது மூதாதையிலிருந்து தோன்றியது என்று நிரூபித்ததுடன் வாழ்க்கைக்கான போராட்டத்தில் தக்கென பிழைத்து தகாதன அழிகின்றன என்ற கொள்கையை வெளியிட்டார். சமய அடிப்படையில் இப்புத்தகம் ஒரு புரட்சியை ஏற்படுத்தினாலும் பின்னர் உயிரினவாதிகளால் இக் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும், லூயி பாஸ்டர், றொபர் கொக் போன்றோர் வெளியிட்ட நுண்ணுயிர்களே நோய்களுக்குக் காரணம் என்ற கருத்து உயிரியலின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

லூயி பாஸ்டர் (1882 - 1895) இவர் பிரான்ஸ் தேச நுண்ணுயிரியலறிஞர். நொதித்தல் எனும் இரசாயன விளைவு, 1886ஆம் ஆண்டு பிரான்ஸில் ஏற்பட்ட பட்டுப்பூச்சி நோய் ஆகியவற்றிற்கு காரணம் நுண்ணுயிர்களே என்பதைக் கண்டுபிடித்தவர். லூயிபாஸ்டர் இரசாயனத்துறையிலிருந்து பின்னர் உயிரியல் துறைக்கு மாறிய ஒரு விஞ்ஞானி, உயிரியல் நுண்ணுயிர்கள் பற்றி இவர் மேற்கொண்ட ஆய்வுகள் வைத்தியத்துறையுடன் இவரைத் தொடர்புகொள்ள வைத்தது.

வைத்திய விஞ்ஞானத்திற்கு லூயி பாஸ்டரின் பங்களிப்பு

வைரஸ் கிருமிகளால் ஏற்படும் நோய்களுக்கான தடுப்பூசி மருந்துகளை இவர் கண்டுபிடித்தார். குறிப்பாக விசர்நாய்க் கடியினால் ஏற்படக்கூடிய நீர் வெறுப்பு நோய், அம்மை நோய் என்பவற்றைக் குணப்படுத்தக்கூடிய தடுப்பூசி மருந்துகளை இவர் கண்டுபிடித்தார். லூயி பாஸ்டர் விசர் நாய் கடியினால் ஏற்படக்கூடிய நீர்ப்பாய நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பின் போது கட்டுப்பாட்டுக்குழு முறையைக் கையாண்டார். நான்கு நாய்களை எடுத்து அவற்றிக்கு வைரஸ் கிருமியினை ஏற்றினார். பின்னர் அவற்றுள் இரண்டு நாய்களுக்கு மாத்திரம் தடுப்பு மருந்தினை ஏற்றினார். ஒரு மாத்தின் பின் லூயி பாஸ்டரும் அவரின் உதவியாளர்களும் மூன்று வருடமாக தாம் ஈடுபட்ட கடின உழைப்பில் வெற்றி கண்டதாக அறிவித்தார்கள். ஏனெனில் தடுப்பு மருந்து ஏற்றப்பட்ட நாய்கள் இரண்டும் குணமடைந்து தமது கூடுகளில் ஓடித்திரிந்து கொண்டிருக்க மருந்து ஏற்றப்படாத இரண்டு நாய்கள் ஊழையிட்டுக் கொண்டு இறந்தன. எனவே லூயிபாஸ்டரின் இக்கண்டுபிடிப்பு திட்டமிடப்பட்டவையாகும். வைன், பியர், பால், போன்ற பொருட்கள் பழுதடைவதற்கு காரணம் வழியிலுள்ள நுண்ணுயிர்களே என்பதைக் கண்டுகொண்ட லூயி பாஸ்டர் அவற்றை கெடா வண்ணம் வைத்திருப்பதற்குரிய முறையையும் கண்டு பிடித்தார். இதுவே பாஸ்;டர் முறை எனப்படுகிறது.

உயிரியலில் ஆற்றிய பணி
தாழ்மட்ட அங்கள் சேறு, பாலாடை, மரம் போன்ற உயிரற்ற சடப்பொருட்களிலிருந்து உயிர் தோற்றம் பெற்றன எனக் கூறும் தன்னிச்சைப் பிறப்புக் கொள்கை அரிஸ்டோட்டிலினாலும் பழங்காலத்து மக்களாலும் நம்பப்பட்டு வந்தது. இக்கொள்கையை லூயி பாஸ்டர் பரிசோதனைகள் மூலம் தவறானவை எனக் காட்டினார். பாஸ்டர் உயிர் உள்ளவற்றிலிருந்து தான் உயிர் தோன்றியது எனும் கொள்கையைக் கொண்டிருந்தார். இதற்காக இவர் மேற்கொண்;ட பரிசோதனைக்காக நுணுக்குக்காட்டி, அண்ணக்கழுத்துக்குடுவை போன்ற கருவிகளைப் பயன்படுத்தினார்.

தற்கால விஞ்ஞான வளர்ச்சி.

இன்று விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேறியுள்ளன. ஆய்வுசெய்தல், புதியவற்றைக் கண்டுபிடித்தல் போன்றன ஓர் ஒழுங்குமுறைக்குட்பட்டுள்ளது. இன்று வி;ஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்குமிடையே உள்ள கால அளவு குறைந்து கொண்டே வருகின்றது. 18ம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து 20 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதிவரை உள்ள காலத்தில் தோன்றிய 12 சிறந்த கண்டுபிடிப்புக்கள் நடைமுறைக்கு வருவதற்கு எடுத்த காலங்கள் பற்றிய விபரங்களை அட்டவணையில் காண்க.

ஆம்பத்தில் கால்நடையாகப் பயணம் செய்த மனிதன் உருளை வடிவான சக்கரங்களைக் கண்டுபிடித்தான். 19ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உள் ஏரி இயந்திரத்தின் மூலம் மனிதன் மணிக்கு 140 கி.மீற்றர் வேகத்தில் பயணம் செய்தான். 1945 இல் மேற்கூறியதைப் போல 10 மடங்கு வேகத்தில் ஜெட் விமானங்கள் மூலம் பறந்தான். இன்று விண்வெளி வீரர்கள் 40இ000 கி.மீற்றர் வேகத்தில் வானவெளியில் பறக்கின்றனர். இன்று 'தூரம்' (னுளைவநnஉந) என்பது பொருட்படுத்தத் தேவையற்றதொன்றாக மாறிவிட்டது.

விஞ்ஞானத்தில் ஏற்பட்டுவரும் இப் பெருவளர்ச்சியானது தனி மனிதன் சமநிலையில் செயற்படுதல், சமூக வாழ்க்கை, சமூக அமைப்புக்கள், பண்டைய பெறுமானங்கள் போன்றவற்றின் நிலைத்தை தன்மையாகவும் அதிர்ச்சிக்கும், மாற்றத்திற்க்கு உட்பட்டுள்ளன. இவை நன்மை பயப்பனவாகவோ அல்லது தீமை தருவனவாகவோ இருக்கலாம். எனினும் இவ்வதிர்ச்சிகளும், மாற்றங்களும் முன்பு தேவைப்பட்டிராக அளவுக்க மாற்றத்துடன் பொருந்திப்போகும் அவசியத்தினை மனிதனிடம் தோற்றுவித்துள்ளன.

விஞ்ஞான வளர்ச்சியினால் எதிர்காலத்தில் கண்டுபிடிப்புகள் மட்டுமன்றி உற்பத்தித்திறன், தர உயர்வு, பொருட்களின் உறுதியும் நம்பகத் தன்மையையும் இன்றைய நிலைமையைவிடத் துரிதமாக முன்னேறலாம். மின்னனுவியலின் முன்னேற்றமும் கணணியின் உதவியும் இணைந்து ஒரு புதிய விஞ்ஞான யுகத்தையே தோற்றுவித்துள்ளன. தொழிற்துறையின் உற்பத்திப் பெருக்கத்திற்கான வாய்ப்புக்கள் இன்று புதுப்பிக்கப்பட்டுள்ளன. இன்று மிக நுண்ணிய அமைப்பினைக் கொண்ட சில பொருட்கள் குறிப்பாக அணுக்கள் மூலக்கூறுகள் ஆகியவற்றைக் கொண்டு கூட்டு மூலப்பொருட்களை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இவை முற்றாக மூலப்பொருட்களைவிட சிறப்புமிக்கவை. இக்கண்டுபிடிப்புக்குள் தொழிற்துறையை இயற்கை மூலவளங்களிலிருந்து விடுவித்து சேதனைப்பொருள், கணிப்பொருட்கள், மூலகம் என்பவற்றிலிருந்து பெறப்படு; மூலப்பொருட்களைச் சார்ந்து செயற்படும் நிலைக்க மாற்றியுள்ளது.

இன்று ஏற்பட்டு வரும் விஞ்ஞான வளர்ச்சியானது விதிவிலக்கின்றி எல்லா நாடுகளினையுமே பாதித்துள்ளது. அத்துடன் மனித விழுமியங்கள், ஒழுக்கவியல் பண்புகள், கலைப்பொருள் ஆக்கம் பண்பாட்டு வளர்ச்சி ஆகியவற்றிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியினால் மனிதன் பல்வேறு நிலைகளிலும் புதியபல வாய்ப்புக்களைப் பெற்றுள்ளான். ஆனால் அவன் முன்பு இருந்ததைவிட மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றானா?, பூமியினைச் சார்ந்து வாழும் நிலையில் இருந்து விடுபடும் நிலையினை விஞ்ஞானம் மனிதனுக்கு வழங்குமா?, விஞ்ஞான வளர்ச்சியின் தீய விளைவுகளிலிருந்து மனிதன் தப்ப முடியுமா? போன்ற வினாக்கள் இன்று உலகில் உள்ள சான்றோர்கள் எல்லோரிடமும் விடைகாண முடியாதவையாக உள்ளன.

விஞ்ஞான வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இவ்வளர்ச்சிக்கு மத்தியிலும் மக்களிடையே விஞ்ஞான உளப்பாங்கு வளர்ச்சியடையுமாயின் தங்கள் பழம்பெரும் பண்பாட்டுடன் வி;ஞ்ஞானக் கருத்துக்களையும் இணைத்துத் தமது வாழ்க்கையை வளப்படுத்துவதுடன் உலகப் பொதுவாழ்விற்கு ஒவ்வொரு நாடும் நாட்டுமக்களும் பங்களிப்பைச் செய்ய முடியும். இதனால் ஒவ்வொரு நாடும் தமது பண்பாட்டு அமைப்புக்களைப் பாதுகாக்கவும் உலக அமைதிக்கும் உதவ முடியும், உலக நாடுகள் யாவும் விஞ்ஞான வளர்ச்சியையும் தொழிநுட்ப வளர்ச்சியையும் ஆக்க முயற்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

ImageImageImage
ImageImage

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

2 comments:

  1. Thank you sir

    ReplyDelete
  2. உங்கள் சேவை மேன்மேலும் வளர இறைவணை வேண்டுகின்றேன்.

    ReplyDelete