அகரம்: கலம் என்றால் என்ன?

கலம் என்றால் என்ன?

கலம் என்னும் ஒரு சிறிய என்றுமே சுறு சுறுப்பாக இயங்கும் நகரம் அது. கலம் அவ்வளவு சுறு சுறுப்பாக இருக்கக் காரணமே அந்த கரு என்னும் தலைமை அமைப்பு தான்.
கரு கலத்தின் அனைத்துத் செயற்பாட்டயுமே கட்டுப்படுத்தி சீராக்குகிறது.
அந்த நகரம் என்றுமே பளிச் எனக் காணப்படக் காரணம் அங்கு காணப்படும், முழு நகரத்திற்கும் சக்தியை வழங்கும் இழைமணியே.
வலு வீடு எனப்படும் இவ் இழைமணி ATP சக்தியை உருவாக்குவதை தொழிலாகக் கொண்டது. இழைமணியானது electricity board‘ஐ போன்றது.
றைபோசொம், அகமுதழுருச் சிறுவலை, பச்சையவுருமணி என்பன கலம் என்னும் நகரத்திற்குத் தேவையான பதார்த்தங்களை உட்பத்தியாக்குகிறது.
ரைபோசோம் – புரதத்தையும்,
பச்சையவுருமணி- மாப்பொருளையும் பிரதானமாக உற்பத்தியாக்கும்.
அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பதார்த்தங்களை குறித்த இடத்திலிருந்து எடுத்து, வேறு இடங்களிற்கு அவற்றை கொண்டு செல்லும் தொழிலை கொல்கி உபகரணம் புரிகின்றது.
கலம் என்னும் நகரத்தின் வெளி எல்லை கலமென்சவ்வே. கலமென்சவ்வு ஒரு நாட்டின் எல்லை போன்றது.
நாட்டின் எல்லையில் இராணுவம் இருந்து நாட்டினுள் வரும், நாட்டிலிருந்து வெளிச்செல்லும் அனைத்தையும் ஒழுங்காக்குவர். அதே போல் கல மென்சவ்வு கலத்தை கட்டுப்படுத்தி ஒழுங்காக்கும் அமைப்பாகும்.

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment